Kandar Kalivenba Lyrics in Tamil

உள்ளடக்கம்

Kandar Kalivenba Lyrics in Tamil
ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரியபாமேவு தெய்வப் பழமறையும் .. தேமேவுநாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்தபோதமும் காணாத போதமாய் .. ஆதிநடு …… 1
அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்பந்தம் தணந்த பரஞ்சுடராய் .. வந்தகுறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்செறியும் பரம சிவமாய் .. அறிவுக்கு …… 2
அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றேமனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் .. தனாதருளின்பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் .. எஞ்சாத …… 3
பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்காரணமும் இல்லாக் கதியாகித் .. தாரணியில்இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்தந்திரத்தில் சாராது சார்வதுபோல் .. முந்தும் …… 4
கருவின்றி நின்ற கருவாய் அருளேஉருவின்றி நின்ற உருவாய்த் .. திரிகரணம்ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால் இலயபோகஅதி காரப் பொருளாகி .. ஏகத்து …… 5
உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்பருவ வடிவம் பலவாய் .. இருள்மலத்துள்மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமலபாகமுறவே கடைக்கண் பாலித்துத் .. தேகமுறத் …… 6
தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்பெந்த முறவே பிணிப்பித்து .. மந்த்ரமுதல்ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து .. மாறிவரும் …… 7
ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎன்பான்ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் .. தீர்வரியகன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போற்சென்மித்து உழலத் திரோதித்து .. வெந்நிரய …… 8
சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்நற்காரணம் சிறிது நண்ணுதலும் .. தர்க்கமிடும்தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவேநன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து .. முன்னூல் …… 9
விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்சரியைகிரி யாயோகம் சார்வித்து .. அருள்பெருகுசாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்துஆலோகம் தன்னை அகற்றுவித்து .. நால்வகையாம் …… 10
சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்ஒத்துவரும் காலம் உளவாகிப் .. பெத்தமலபரி பாகம் வருமளவில் பன்னாள்அலமருதல் கண்ணுற்று அருளி .. உலவாது …… 11

அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டாநெறியில் செறிந்தநிலை நீங்கிப் .. பிரியாக்கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு .. திருநோக்கால் …… 12
ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் .. பாழாகஆணவமான படலம் கிழித்து அறிவில்காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் .. பூணும் …… 13
அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்கடியார் புவனமுற்றும் காட்டி .. முடியாதுதேக்குபர மானந்தம் தெள்ளமுதம் ஆகிஎங்கும்நீக்கமற நின்ற நிலைகாட்டிப் .. போக்கும் …… 14
வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்இரவும் கடந்துலவா இன்பம் .. மருவுவித்துக்கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் .. மின்னிடத்துப் …… 15
பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளிவெற்பில்வாய்த்தனைய தெய்வ வடிவாகி .. மூத்தகருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்றுஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் .. பெருகியெழு …… 16
மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்திஆன்றபர முத்தி அடைவித்துத் .. தோன்றவரும்யானெனதென்று அற்ற இடமே திருவடியாமோனபரா னந்தம் முடியாக .. ஞானம் …… 17
திருஉருவா இச்சை செயலறிவு கண்ணாஅருளதுவே செங்கை அலரா .. இருநிலமேசந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்பின்னமற நின்ற பெருமானே .. மின்னுருவம் …… 18
தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்வாய்ந்த கிரண மணிமுடியும் .. தேய்ந்தபிறைத்துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனையபுண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் .. விண்ட …… 19
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்குஅருள்பொழியும் கண்மலர் ஈராறும் .. பருதிபலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்குலவு மகரக் குழையும் .. நிலவுமிழும் …… 20
புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் .. வின்மலிதோள்வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்துதெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் .. எவ்வுயிர்க்கும் …… 21
ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்பவாழ்வுதரும் செய்ய மலர்முகமும் .. சூழ்வோர்வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்முடிக்கும் கமல முகமும் .. விடுத்தகலாப் …… 22
பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும்வாச மலர்வதன மண்டலமும் .. நேசமுடன்போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்மோகம் அளிக்கும் முகமதியும் .. தாகமுடன் …… 23
வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் .. கொந்தவிழ்ந்தவேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்தபாரப் புயசயிலம் பன்னிரண்டும் .. ஆரமுதம் …… 24
தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்மேவக் குழைந்தணைந்த மென்கரமும் .. ஓவாதுமாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்சேர அணிந்த திருக்கரமும் .. மார்பகத்தில் …… 25
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்உய்த்த குறங்கில் ஒருகரமும் .. மொய்த்தசிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்கறுவுசமர் அங்குசம்சேர் கையும் .. தெறுபோர்…… 26
அதிர்கே டகம் சுழற்றும் அங்கைத் தலமும்கதிர்வாள் விதிர்க்கும் கரமும் .. முதிராதகும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட் டணைந்தஅம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் .. பைம்பொன் …… 27
புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்அரைஞாணும் கச்சை அழகும் .. திருவரையும்நாதக்கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்பாதத்து அணிந்த பரிபுரமும் .. சோதி …… 28
இளம்பருதி நூறா யிரங்கோடி போலவளந்தரு தெய்வீக வடிவும் .. உளந்தனில்கண்டுஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே .. ஓதியஐந்து …… 29
ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்நீங்காத பேருருவாய் நின்றோனே .. தாங்கரியமந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்தொந்தமுறும் வன்னமே தொக்காகப் .. பந்தனையால் …… 30
ஒத்த புவனத் துருவே உரோமமாத்தத்துவங்க ளேசத்த தாதுவா .. வைத்தகலையே அவயவமாக் காட்டும் அத்து வாவின்நிலையே வடிவமா நின்றோய் .. பலகோடி …… 31
அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் .. தொண்டுபடும்ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்ஏவித் தனிநடத்தும் எங்கோவே .. மேவ …… 32
வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்தரும்அட்ட யோகத் தவமே .. பருவத்துஅகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்புகலாகும் இன்பப் பொருப்பும் .. சுகலளிதப் …… 33
பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்தேரின்ப நல்கும் திருநாடும் .. பாரின்பம்எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவுஅல்லாது உயர்ந்த அணிநகரும் .. தொல்லுலகில் …… 34
ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்து ஐந்தெழுத்தைக்கூறி நடாத்தும் குரகதமும் .. ஏறுமதம்தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் .. வாய்ந்தசிவ …… 35
பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலராநாரகத்துள் கட்டு நறுந்தொடையும் .. காரணத்துள்ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்வந்தநவ நாத மணிமுரசும் .. சந்ததமும் …… 36
நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்ஆக்கி அசைத்தருளும் ஆணையும் .. தேக்கமழ்ந்துவீசும் பனுவல் விபுதர் தனித்தனியேபேசும் தசாங்கமெனப் பெற்றோனே .. தேசுதிகழ் …… 37
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி .. ஆங்கொருநாள்வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கிஐந்து முகத்தோடு அதோமுகமும் .. தந்து …… 38
திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப .. விரிபுவனம்எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் .. அங்கண் …… 39
எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் .. அடுத்ததொருபூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் .. போதொருசற்று …… 40
அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் .. முன்னர்அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடிநறுநீர் முடிக்கணிந்த நாதன் .. குறுமுறுவல் …… 41
கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் .. தன்னிரண்டுகையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்துமெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் .. செய்ய …… 42
முகத்தில் அணைத்துச் சி மோந்து முலைப்பால்அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் .. சகத்தளந்தவெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்துஉள்ளம் உவப்ப உயர்ந்தோனே .. கிள்ளைமொழி …… 43
மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்துங்க மடவார் துயர்தீர்ந்து .. தங்கள்விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்மருப்பாயும் தார்வீர வாகு .. நெருப்பிலுதித்து …… 44
அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்செங்கண் கடா அதனைச் சென்று கொணர்ந்து .. எங்கோன்விடுக்குதி என்று உய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்டிக்கும்நடத்தி விளையாடும் நாதா .. படைப்போன் …… 45
அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தொன்றுஉகந்த பிரணவத்தின் உண்மை .. புகன்றிலையால்சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்கன் என்றுமுனம்குட்டிச் சிறையிருத்தும் கோமானே .. மட்டவிழும் …… 46
பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்பமுன்னம் பிரமம் மொழிந்தோனே .. கொன்னெடுவேல்தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாகவீரவடி வேல் விடுத்தோனே .. சீரலைவாய்த் …… 47
தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணைவெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து .. வெள்ளைக்கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் .. சயேந்திரனாம் …… 48
சூரனைச் சோதித்துவரு கென்றுதடம் தோள்விசயவீரனைத் தூதாக விடுத்தோனே .. காரவுணன்வானவரை விட்டு வணங்காமை யால் கொடியதானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் .. பானு …… 49
பகைவன் முதலாய பாலருடன் சிங்கமுகனைவென்று வாகை முடித்தோய் .. சகமுடுத்தவாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்சூருடலம் கீண்ட சுடர் வேலோய் .. போரவுணன் …… 50
அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் .. அங்கவற்றுள்சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமாஏறி நடாத்தும் இளையோனே .. மாறிவரு …… 51
சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎனமேவத் தனித்துயர்த்த மேலோனே .. மூவர்குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே .. மறைமுடிவாம் …… 52
சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்தெய்வக் களிற்றை மணம்செய்தோனே .. பொய்விரவுகாமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்வாமமட மானின் வயிற்றுதித்தப் .. பூமருவு …… 53
கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்ஏனற் புனங்காத்து இனிதிருந்து .. மேன்மைபெறத்தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்தவள்ளிக் கொடியை மணந்தோனே .. உள்ளம் உவந்து …… 54
ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே .. நாறுமலர்க்கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்செந்தில் பதிபுரக்கும் செவ்வேளே .. சந்ததமும் …… 55
பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும்பல்கோடி விக்கினமும் பல்பிணியும் .. பல்கோடிபாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்பூதமும் தீ நீரும் பொருபடையும் .. தீது அகலா …… 56
வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் .. அவ்விடத்தில்பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்அச்சம் அகற்றும் அயில்வேலும் .. கச்சைத் …… 57
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறுஅருள்விழியும் மாமுகங்கள் ஆறும் .. விரிகிரணம்சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்எந்தத் திசையும் எதிர்தோன்ற .. வந்திடுக்கண் …… 58
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்துஉல்லாசமாக உளத்திருந்து .. பல்விதமாம்ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் .. ஓசை …… 59
எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்துபழுத்த தமிழ்ப்புலமை பாலித்து .. ஒழுக்கமுடன்இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றிமும்மைப் பெருமலங்கள் மோசித்துத் .. தம்மைவிடுத்து …… 60
ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்தோயும் பரபோகம் துய்ப்பித்துச் .. சேயகடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டுஅடியேற்கு முன்னின்று அருள். …… 61
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று.
Also, Read

Source: https://kaumaram.com/text_new/k_kalivenpa_u.html

No comments

Leave a Reply