துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்சஷ்டி கவசந்தனை.அமரர் இடர் தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே குறி..
சஷ்டியை நோக்கச் சரவணபவனார்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண்கிணியாடமையல் நடம் செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்துவர வர வேலாயுதனார் வருகவருக வருக மயிலோன் வருகஇந்திரன் முதலாய் எண்டிசை போற்றமந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருகநேசக் குறமகள் நினைவோன் வருகஆறுமுகம் படைத்த ஐயா வருகநீறிடும் வேலவன் நித்தம் வருகசிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவணபவனார் சடுதியில் வருகரகணபவச ரரரர ரரரரிகண பவச ரிரிரி ரிரிரிவிணபவ சரவண வீராநமோ நமநிபவ சரவண நிற நிற நிறென்
வசர ஹணபவ வருக வருகஅசுரர் குடிகெடுத்த ஐயா வருகஎன்னையாளும் இளையோன் கையில்பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருகஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்கிலியும் சௌவும் கிளரொளி யையும்நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்குண்டலியாம் சிவகுகன் தினம் வருகஆறுமுகமும் அணிமுடியாறும்நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்பல்பூஷணமும் பதக்கமும் தரித்துநன்மணி பூண்ட நவரத்தினமாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்செப்பழகுடைய திருவயிறுந்தியும்துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்நவரத்தினம் பதித்த நற்சீராவும்இருதொடை யழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்கசெககண செககண செககண செகணமொக மொக மொகமொக மொக மொக மொகெனநகநக நகநக நகநக நகெனடிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரரரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிடுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடுடகு டகு டிகு டிகு டங்கு டிங்குகுவிந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்துஎன்றனை யாளும் ஏரகச் செல்வமைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்லாலா லாலா லாலா வேசமும்லீலா லீலா லீலா விநோதனென்றும்
உன் திருவடியை உறுதியென்றெண்ணும்என் தலைவைத்துன் இணையடி காக்கஎன்னுயிர்க்குயிராம் இறைவன் காக்கபன்னிரு விழியால் பாலனைக் காக்கஅடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்ககதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்கவிதிசெவியிரண்டும் வேலவர் காக்கநாசிகளிரண்டும் நல்வேல் காக்கபேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்கசெப்பிய நாவைச் செவ்வேல் காக்ககன்னமிரண்டும் கதிர்வேல் காக்கஎன்னிளங்கழுத்தை இனியவேல் காக்கமார்பை ரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்கவடிவேலிருதோள் வளம் பெறக்காக்கபிடரிக ளிரண்டும் பெருவேல் காக்கஅழகுடன் முதுகை அருள்வேல் காக்கபழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்கசிற்றிடையழகுற செவ்வேல் காக்கநாணாங் கயிற்றை நல்வேல் காக்கஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்கபிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்கபணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்ககணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்கஐவிரலடியினை அருள் வேல் காக்ககை களிரண்டும் கருணை வேல் காக்க
முன் கையிரண்டும் முரண்வேல் காக்கபின்கை யிரண்டும் பின்னவள் இரக்கநாவிற் சரஸ்வதி நற்றுணையாகநாபிக் கமலம் நல்வேல் காக்கமுப்பால் நாடியை முனை வேல் காக்க
எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்கஅடியேன் வசனம் அசைவுள நேரம்கடுகவே வந்து கனகவேல் காக்கவரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்கஅரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்கதாமதம் நீக்கி சதுர்வேல் காக்ககாக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியினில் நோக்கதாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபடபில்லி சூனியம் பெரும்பகை அகலவல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்அல்லல் படுத்தும் அடங்கா முனியும்பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்
கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்அடியனைக் கண்டால் அலறிக கலங்கிடஇரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்தண்டியக் காரரும் சண்டாளர்களும்என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிடஆனையடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகளென்பும்நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்பாவைகளுடனே பலகலசத்துடன்மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திடமாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிடகாலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிடவாய் விட்டலறி மதிகெட்டோடப்படியினில் முட்டப் பாசக் கயிற்றால்கட்டுடனங்கம் கதறிடக் கட்டுகட்டியுருட்டு கால் கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டுமுட்டு முட்டு விழிகள் பிதுங்கிடசெக்கு செக்கு செதில் செதிலாகசொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்குகுத்து குத்து கூர் வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெரிதணலெரி தணலெரி தணலதுவாகவிடு விடு வேலை வெருண்டது ஓடபுலியும் நரியும் புன்னரி நாயும்எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்கஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்குகுடைச்சல் சிலந்தி குடல்விப் பிhதிபக்கப்பிளவை படர்தொடை வாழைகடுவன் படுவன் கைத்தாள் சிலந்திபற்குத்தரணை பருஅரையாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்ஈரேழுலகமும் எனக்குறவாகஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய்மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக
உன்னைத் துதிக்க உன்திருநாமம்சரவணபவனே சைலொளிபவனேதிரிபுரபவனே திகழொளிபவனேபரிபுரபவனே பவமொழிபவனேஅரிதிருமுருகா அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்கந்தா குகனே கதிர்வேலவனேகார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனைஇடும்பனை அழித்த இனியவேல் முருகாதணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகாபழநிப் பதிவாள் பாலகுமராஆவினன் குடிவாள் அழகிய வேலாசெந்தின்மா மலையுறும் செங்கல் வராயாசமரா புரிவாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்என்னா விருக்க யானுனைப் பாடஎனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்பாடினே னாடினேன் பரவசமாகஆடினே னாடினேன் ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்பாச வினைகள் பற்றது நீங்கிஉன்பதம் பெறவே உன்னருளாகஅன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்மெத்த மெத்தாக வேலா யுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்கவாழ்க வாழ்க மயிலோன் வாழ்கவாழ்க வாழ்க வடிவேல் வாழ்கவாழ்க வாழ்க மலைக்குரு வாழ்கவாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்கஎத்தனை குறைகள் எத்தனை பிழைகள்எத்தனை யடியேன் எத்தனை செயினும்பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமேபிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்துமைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்கந்தசஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைகாலையில் மாலையில் கருத்துடனாளும்ஆசாரத்துடன் அங்கம் துலக்கிநேச முடனொரு நினைவதுமாகிகந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டுஓதியே செபித்து உகந்து நீறணியஅஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்நல்லோர் நினைவில் நடனம் புரியும்சர்வசத்துரு சங்காரத்தடி
அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில்வீரலட்சுமிக்கு விருந்துணவாகசூரபத்மாவைத் துணித்தகையதனால்இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்தகுருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றிஎனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்மேவிய வடிவுறும் வேலவா போற்றிதேவர்கள் சேனாபதியே போற்றிகுற மகள் மன மகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றிஇடும்பாயுதனே இடும்பா போற்றிகடம்பா போற்றி கந்தா போற்றிவெட்சி புனையும் வேலே போற்றிஉயர்கிரி கனகசபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்சரணம் சரணம் சரவணபவஓம்சரணம் சரணம் சண்முகா சரணம்..!
Leave a Reply