உள்ளடக்கம்
Thirukoodal Narpathu
கதம்பம் 3
பொய் நீக்கி மெய்க் காட்டி பொற்கிழியறுத்தப் பட்டனைதெய்வம் நாராயணன் என்றுணர்த்திய விட்டுச்சித்தனைபட்டத்தானைமிசை யேற்றினான் வல்லபன் -கருடப்புள்ளேறி விட்டத்தில் தோன்றியது திருக்கூடல் அழகனே! (23)
வாணகன் வானிலே விட்டுசித்தன் காணவே!மாண்கெழுக் காட்சியை மக்களும் காணவே!கண்ணூறு கழிக்கவே காலமெல்லாம் நிலைத்திடும்வைணவ வைரமாய் திருப்பல்லாண்டு பிறந்ததே! (24)
கோரிய வரத்தினை தடையில்லா வழங்கிடும்காரிருள் கூடற் கோவிந்தன் அழகினைகூரிய வேல் கொண்ட கலியன் கூறியசீரிய பாசுரம் அழகிற்கோர் உவமானமே! (25)
கீர்த்தனைகள் பாடி கண்ணனை கண்டவன்கிருதமாலா நதியினிலே நீராட வந்தவன்!வங்கத்து வைணவன் கிருட்ண சைத்தன்யன்சங்கமாமதுரையில் கூடலழகன் காட்சி பெற்றானே! (26)
வாகாரு தோள் கொண்ட வினதைப் புதல்வனே!ஆகாயம் பறக்கிராய் அழகனைத் தாங்கியேசூசகமாய் சுமந்திடு சுந்தரன் சுடர்முகம் வாடாதுகேசவன் பாதங்கள் நோகாது பறந்திடு! (27)
சேவகனாய் பெருமாளை சுமக்கும் புள்ளரசே!சாவரம் சுமந்திடும் சாமான்ய சீவாத்மா நான்பரமாத்மன் அழகனை என் சிந்தையில் சுமப்பதால்இராமனுசன் வழியிலே நானும் சேவகனானேனே! (28)
பாயிரம் பாடியே நற்பாதையைக் காட்டியும்ஆயிரம் பெயர்யுடை அழகனை மறப்பரோ!தீயினம் எவ்வினம் உனை மறந்த அவ்வினம்ஆயினும் அருள்கிறாய் உன் மனம் தாய்மனம்! (29)
கூடுதல் அழகா நீ கூடல் அழகா ? நின்னைப்பாடுதல் அழகா? நின் பாடல் அழகா? நான்வாடுதல் அழகா ? நீ பார்பதுமழகா ? நின்னைத்தேடுதல் அழகா ? திரையின் பின் போவதுமழகா! (30)
போராய் போர்களமாய் என் மனமும் போராடும்நேராய் வழி நடந்திடவே நின் நிழலையது தேடும்வாராய் என்னுடனே எந்நாளும் ஒர் துணையாய்சீராரத் திருக்கூடலமர்ந்த கோவிந்தனே! (31)
வினைப்பயன் அனைத்தையும் விதைப்பவன் அடைகிறான்வினைப்பயன் அனைத்தையும் படைத்தவன் அறிகிறான்!வினைப்பயன் துரத்திடும் வியப்பு தான் வாழ்க்கையோ ?வினைக்கட்டறுத்திட அழகனோ அழைக்கிறான்! (32)
சோகமாகித் துவண்டுபோன நாட்களும் கடந்து போய்வேகமாகி தாகமாகி உன்னை தேடி தேடியேஇராகமாகி கீதமாகி உன்னை போற்ற வேண்டுமேதேகமாகி ஏகமாகி உன்னை வந்து சேருமுன்! (33)
Also, read
Our Sincere Thanks:
கம்பத்தடியான் (Sudharsana Srinivasan)Email ID: [email protected] or [email protected]
Leave a Reply