உள்ளடக்கம்
Thirukoodal Narpathu
கதம்பம் 2
தூயவன் சாயவன் தூதுழாய் மாயவன்வேயவன் வேயவள் போற்றிய வாமனன்!ஆயவள் ஆயவன் ஆநிரை நேயவன்மேயமில் மேணியன் பாற்கடற் பாயலன்! (12)
புவியளந்த பெருமாளின் படி தாண்டா பத்தினியாம்பவித்தரை இவளென்று பாரெங்கும் கொண்டாடமதுரவல்லி மணாளன் எந்தை என்றானபின்மதுரமாநகருளே ஆதித் தாய் எனக்குந்தாயானாலே! (13)
தூமலர்த் தாமரைக் கரத்தினைக் கொண்டவள்மாமலை தாங்கிய அழகனை வென்றவள்!புரட்டாசி பாற்குடமுன் பாதத்தில் சேர்வித்தால்துருசுடை பேய்மனம் தூமனம் ஆகாதோ! (14)
தீக்குணம் தாங்கித் தீவினைச் செய்திடும்மாக்களை எல்லாம் போகத்தில் வைக்கிறான்!மிகுதியாய் பக்தனை சோதிப்பான் சீதரன்வகுளவல்லித் தாயே இது முறைதானா ? (15)
தருவது போல் பெருவான்! பெருவது போல்தருவான்! கொடுப்பது போல் கெடுப்பான்!கெடுப்பது போல் கொடுப்பான்! போதுமேகூடலழகாவுன் மாயைகளென்றால் விளக்கிடுவான்! (16)
மதங்கத்தின் மணியோசை மாடவீதி எதிரொளிக்கமத்தகம் பொன் மினுக்க கண்வெறித்த சனம் விலக!மதலைக் குழாம் ஒன்றோ அம்பாரி அடம்பிடிக்கமதலைக் குழாம் போல அடம்பிடித்தேன் உன் முகங்காண! (17)
சங்கமும் மத்தளியும் துளைக்கருவி வாத்தியமும்சங்கீத சாகரம் போல் வளியெல்லாம் தேனிசைக்க!மங்கல இசை வருகை உன் வரவைச் சொல்லிட!எங்ஙனம் நான் அறிவேன் உன் சுந்தர முகங்காண! (18)
திரிதண்டம் கையிலேந்தி திருநாமம் நுதல் பரப்பிபெருங்கோட்டி வருகுதே தமிழ்மறை ஓதியே!பன்னிருவர் பாசுரம் மாருதப் பயணத்தில்என்னிருச் செவி புகுதே உன் அழகு முகங்காண! (19)
வையத்தில் அழகெல்லாம் யார் கொண்டு போனதோ ?வையத்தின் அழகெல்லாம் ஓருருவு கொண்டதோ ?திருவிழா நாயகன் வியூக சுந்தர ராசனோ வாழ்வினைமெருகேத்த வீதியுலா வருகிறான்! (20)
அகம்வென்ற அழகனின் முகங் கண்டு நிற்கிறேன்!சகம் காக்கும் ஒருவனின் முகங் கண்டு நிற்கிறேன்!யுகங்கண்ட ராசனும் எனைத் தாண்டிச் செல்கிறான்!சுகங்கண்ட என்னுள்ளம் உடல் மறந்து பின் செல்லுதே! (21)
மாலிருஞ்சோலையில் உளம் கவர்ந்த கள்ளழகனும்வல்லைசூழ் குழகனாய் நின்ற காட்டழகனும்கூடல்மாநகரிலே வலம் தருமழகனும்மூடனாய் இருப்பின் மூவரும் வேறெண்பாய்! (22)
Also, read
Our Sincere Thanks:
கம்பத்தடியான் (Sudharsana Srinivasan)Email ID: [email protected] or [email protected]
Leave a Reply