Thirukoodal Narpathu – திருக்கூடல் நாற்பது கதம்பம் 1

உள்ளடக்கம்

Thirukoodal Narpathu
கதம்பம் 1
பரமபத நாதனாய் தேவிமார் இருவருடன்திருக்கூடல் தலம் கொண்டாய் நான்யுகமுன்னே!இருகரம் இணைத்துச் சிரம் பணிந்தேன் கூடலழகா!வரமொன்று வேண்டும் உன் புகழ் பரப்பிட!   (1)
துயின்மடிந்தான் திருக்கரணத் தளிமம் மீதே!அயன் படைத்தான் உந்தியில், உலகுப் படைக்க!அவ்வுலகிலே என்னையும் ஓருயிராய் படைத்தான்அவ்விடம் அழகனின் அருள் சூழ்ந்தத் திருக்கூடலே!   (2)
நாடினர் அழகனை பிரளயத்தின் தாக்கத்தால்கூடிய மேகங்கள் நான்மாடம் போல் அமைந்திட‌ஆடலும் பாடலும் ஆங்காங்கே திளைத்திட ‍- திருக்கூடல் காத்தக் கூத்தனாய் அமர்ந்தது கருணையே!   (3)
நான்யுகம் கண்டவன் நாளும் காத்தருளும்நான்மறை நாயகன் கலியில் அமர்ந்தருளும்மணவாள மாமுனிகள் மனதாறப் பூசித்த‌மணிவண்ணன் வசித்திடும் திருக்கூடல் தலமே!   (4)
வந்தோரை வரவேற்று அபயமளிக்கும் அரிகேசவன்சந்ததியும் காத்தருள்வான் வாழையடி வாழையாய்இடர் கொஞ்சம் இடம் விலகி வழி தெரியாது ஓடிடும்சுடர் தரும் வாழ்வினை சுகரமாய‌ருளும் கதலிவனத்தானே!   (5)
கங்கையைக் கொண்டவன் நான்மாடக் கூடலில்பங்கயற்கண்ணனின் தங்கையை மணம் முடிக்க!அங்கயற்கண்ணி சொக்கனை கரம்பிடித்தாள் மங்கலத்திங்களில் கூடலழகிய மாதவன் அருளுடன்!   (6)
எல்லோரும் வணங்கிடும் அருட்பெருமழகனாய்மூலமாய் முதல்வனாய் பல்லாண்டுக்குரியவன்!சீராப்தி சயனனோ அட்டங்க உச்சியில் ‍- மத்தியில்சூரிய நாராயனண் சொலிக்கின்றான்!    (7)
அட்டாங்கம் விரித்த‌ அழகனின் முக்கோலம் தெவிட்டாத நாராயண நாமத்தை சொல்லியேதட்டாமல் நாமுமோர் மண்டலம் சுற்றிவந்தால்எட்டாத ஏற்றத்தை எளிதினில் எட்டிடுவோம் !   (8)
ஆதியில் தானவன் சோதியாய் ஆனவன்வேதியன் ஓதுவன் யாகத்தில் பாவகன்மாதிசை மானுடர் காத்திடுங் காவலன்ஆதித்தன் ஆதவன் மாசில்லா மாதவன்!   (9)
சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போல‌சூரிய நாராயணா உன்னைச் சுற்றி வந்தேன்!அண்டத்தின் தீபமாய் நீ மிளிர உன்னையேஅண்டிப் பிழைக்குமென் நெஞ்சத்தின் தீபமும் நீதானே!   (10)
விதைகளின் வலிமை அறிந்தமையால்விதைகளின் வளர்ச்சியை கதிர்களில் தந்தாயோசுதை வண்ண கரங்களில் வீசும் அருட்கதிர்க‌ள்நிதம் தாராயோ நலமுடன் யாம் வளர்ந்திடவே!   (11)
Also, read

Our Sincere Thanks:
கம்பத்தடியான் (Sudharsana Srinivasan)Email ID: [email protected] or [email protected]

No comments

Leave a Reply