உள்ளடக்கம்
Thirukoodal Narpathu
கதம்பம் 4
நன்னிலம் புதைத்தச் சிறுவிதைப் போலஎன்றோ மனதில் பரமேட்டி புதைந்திருந்தான்!முன்னோர் மரபினால் அழகனை கண்டபின்இன்றோ என்னுளிருந்து எனை வளர்த்து ஆள்கிறான்! (34)
பழகிய பரவசம் மனதுள்ளே மாயமாய் கூடல்அழகிய மாயனின் சன்னதி அடைந்தபின்!பழம் பிறப்பு எச்சமோ பான்மையின் மிச்சமோபழம்படி என்னையுமுன் நினைப்பிலே நிறுத்துவாய்! (35)
நீடு நெடு வையையின் இருந்தையூர் இறைவனேநீடு நெடு வாழ்விலே இருந்தெம்மைக் காத்திடாய்!ஈடுயிணை அற்றவன் வீற்றிருக்கும் விக்ரமன்!நாடு கூடல் அழகனை நாடு கூடி வாழவே! (36)
திருக்கூடல் புகழாளன் அருட்கருணைப் போற்றியே!திருக்கூடல் அருளாளன் திருவழகு போற்றியே!மதுரைக்கு மூத்தவள் மதுரவல்லி போற்றியே!புதுவைப் பட்டனும் பல்லாண்டும் போற்றியே! (37)
வேண்டிவந்தால் வளம் தரும் திருமால் கொண்டபாண்டிவள நாட்டிலே தமிழ் சங்கம் பிறந்ததே!பல்வகை இலக்கியம் இருப்பினும் பாட்டுடைத்தலைவனாய் கூடல் அழகன் எங்கேனும் படித்ததுண்டோ ? (38)
புலவர்கள் உன்னை எழுதிட மறந்தனரோ ! இல்லைமாலிக் காஃபுரின் வேட்டையில் இலக்கியம் எரிந்ததோ ?காலத்தின் ஓட்டத்தில் பூமியில் புதைந்ததோ?இலக்கியப் பசியினால் கரையான்கள் தின்றதோ? (39)
மொழிகளின் அரசி தமிழினைக் கொண்டு கூடல்அழகனே உன் பிள்ளை உனைப் போற்றும் படைப்பு!ஏற்றிடுவாய் கம்பத்தடியான் எழுதினையே உனக்காகநற்றமிழில் ஓர் படைப்பு தோன்றும் வரை! (40)
Also, read
Our Sincere Thanks:
கம்பத்தடியான் (Sudharsana Srinivasan)Email ID: [email protected] or [email protected]
Leave a Reply