உள்ளடக்கம்
Thirumurugatrupadai Lyrics in Tamil
நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை
🛕 பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இதுகடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. “ஆற்றுப்படுத்தல்” என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
🛕 திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
1. திருப்பரங்குன்றம்
உலகம் உவப்ப வலனேர்பு திரிதருபலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளஉ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5)
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழைவாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் (10)
துருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்கிண்கிணி கவை அய ஒண்செஞ் சீறடிக்கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைதோட்கோபத் தன்ன தோயாப் பூந்துகிற் (15)
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குற்கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்துணையோர் ஆய்ந்த இணையீ ரோதிச் (20)
செங்fகால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபுபைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்தெய்வ உ த்தியொடு வலம்புரி வயின்வைத்துத்திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் (25)
துவர முடித்த துகளறு முச்சிப்பெருந்தண் சண்பகஞ் சொIஇக் கருந்தகட்டுளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செல்வரும்பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக (30)
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்நுண்பூண் அகந் திளைப்பத் திண்காழ்நடுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வைதேங்கமழ் மருதிணர் கடுப்புக் கோங்கின்குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் (35)
வேங்கை நுண்டா தப்பிப் காண்வரவெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடிவாழிய பெரிதென் றேத்திப் பலருடன்சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் (40)
சூரர மகளிர் ஆடுஞ் சோலைமந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் (45)
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்உ லறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்கழல்கட் கூகையோடு கடும்பாம்பு தூங்கப்பெருமுலை அலைக்குங் காதிற் பிணர்மோட் (50)
டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற்கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலைஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவரவென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா (55)
நிணந்தின் வாயள் துணங்கை தூங்கஇருபே குருவின் ஒருபே ரியாக்கைஅறுவேறு வகையின் அஞ்சுவர மண்டிஅவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத் (60)
தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்சேவடி படருஞ் செம்மல் உ ள்ளமொடுநலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்செலவுநீ நயந்தனை யாயிற் பலவுடன்நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப (65)
இன்னே பெறுதிநீ முன்னிய வினையேசெறுப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடிவரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்பொருநர்த் தேய்த்த போரரு வாயில்திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து (70)
மாடமலி மறுகிற் கூடற் குடவயின்இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்தமுட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் (75)
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்குன்றமர்ந் துறைதலும் உ ரியன் அதா அன்று.
2. திருச்சீரலைவாய்
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்வாடா மாலை ஓடையொடு துயல்வரப்படுமணி இரட்டு மருங்கிற் கடுநடைக் (80)
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்கால்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்டைவே றுருவிற் செய்வினை முற்றியமுடியொடு விளங்கிய முரண்மிகு திருமணிமின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப (85)
நகைதாழ்பு துயல்வரு உ ம் வகையமை பொலங்குழைசேண்விளங் கியற்கை வான்மதி கவைஇஅகலா மீனின் அவிர்வன இழைப்பத்தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்மன்னோர் பெழுதரு வாணிற முகனே (90)
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்காதலின் உ வந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்மந்திர விதியின் மரபுளி வழா அ (95)
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்கருவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம் (100)
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்கம்மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்ஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற்செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு (105)
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோளவிண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகைஉ க்கஞ் சேர்த்திய தொருகைநலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇய தொருகைஅங்குசங் கடவா ஒருகை இருகை (110)
ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப ஒருகைமார்பொடு விளங்க ஒருகைதாரொடு பொலிய ஒருகைகீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகைபாடின் படுமணி இரட்ட ஒருகை (115)
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகைவானர மகளிர்க்கு வதுவை சூ ட்ட வாங்கப்பன்னிரு கையும் பாற்பட இயற்றிஅந்தரப் பல்லியங் கறங்கத் திண்தாழ்வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞால (120)
உ ரந்தலைக் கொண்ட உ ருமிடி முரசமொடுபல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவவிசும்பா றாக விரைசெலன் முன்னிஉ லகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்அலைவாய்fச் சேறலும் நிலைஇய பண்பே அதா அன்று (125)
3. திருவாவினன்குடி
சீரை தைஇய உ டுக்கையர் சீரொடுவலம்புரி புரையும் வானரை முடியினர்மாசற இமைக்கும் உ ருவினர் மானின்உ ரிவை தைஇய ஊன்கெடு மார்பின்என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் (130)
பலவுடன் கழிந்த உ ண்டியர் இகலொடுசெற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும்கற்றோர் அறியா அறவினர் கற்றோர்க்குத்தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடுகடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை (135)
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்துனியில் காட்சி முனிவர் முற்புகப்புகைமுகந் தன்ன மாசில் தூவுடைமுகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (140)
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்மென்மொழி மேவலர் இன்னரம் புளரநோயின் றியன்ற யாக்கையர் மாவின்அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தோறும்பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் (145)
பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குல்மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்றழலென உ யிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற்பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ் சிறைப் (150)
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறுவலவயின் உ யரிய பலர்புகழ் திணிதோள்உ மைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் (155)
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்தாழ்பெருந் தடக்கை உ யர்ந்த யானைஎருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய (160)
உ லகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்பலர்புகழ் மூவருந் தலைவ ராகஏமரு ஞாலந் தன்னில் தோன்றித்தாமரை பயந்த தாவில் ஊழிநான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் (165)
பகலிற் றோன்றும் இகலில் காட்சிநால்வே றியற்கைப் பதினொரு மூவரோடொன்பதிற் றிரட்டி உ யர்நிலை பெறீஇயர்மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்புவளிகிளர்ந் தன்ன செலவின் வளியிடைத் (170)
தீயெழந் தன்ன திறலினர் தீப்படஉ ருமிடித் தன்ன குரலினர் விழுமியஉ றுகுறை மருங்கிற்றம் பெருமுறை கொண்மார்அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் (175)
ஆவினன்குடி அசைதலும் உ ரியன் அதா அன்று.
4. திருவேரகம்
இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅதிருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடிஅறுநான் கிரட்டி இளமை நல்லியாண்டாறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை (180)
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவலஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்புலராக் காழகம் புலர உ டீஇஉ ச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து (185)
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்விநாவியன் மருங்கின் நவிலப் பாடிவிறையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்தேரகத் துறைதலும் உ ரியன் அதா அன்று
5. குன்றுதோறாடல்
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190)
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கட் டேறற (195)
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயரவிரலுளர்ப்ப பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல் (200)
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மரா அத்த வாலிணர் இடையிடுபுசுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழைதிருந்துகாழ் அல்குல் திளைப்ப உ டீஇமயில்கண் டன்ன மடநடை மகளிரொடு (205)
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்குழலன் கோட்டனன் குறும்பல் லியத்தன்தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் (210)
கொடியன் நெடியன் தொடியணி தோளன்நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடுகுரும்பெறிக் கொண்ட நறுந்தண் சாயல்மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி (215)
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்துகுன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே அதா அன்று.
6. பழமுதிர்சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்துவாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇஊரு ர் கொண்ட சீர்கெழு விழவினும் (220)
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்வேலன் தைஇய வெறியயர் களனும்காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225)
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவரநெய்யோ டையவி அப்பி ஐதுரைத்துக்குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறிமுரண்கொள் உ ருவின் இரண்டுடன் உ டீஇச் (230)
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறிமதவலி நிலை இய மாத்தாட் கொழுவிடைக்குருதியொடு விரைஇய தூவெள் அரிசிசில்பலிச் செய்து பல்பிரப் பிaIஇச்சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தௌiத்துப் (235)
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலைதுணையுற அறுத்துத் தூங்க நாற்றிநளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்திநறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடிஇமிழிசை அருவியோ டின்னியங் கறங்க (240)
உ ருவப் பல்பூத் தூஉ ய் வெகுவரக்குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்முருகிய நிறுத்து முரணினர் உ ட்கமுருகாற்றுப் படுத்த உ ருகொழு வியனகர்ஆடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் (245)
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கிஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்திவேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபடஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறேஆண்டாண் டாயினும் ஆக காண்டக (250)
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்கைதொழு உ ப் பரவிக் காலுற வணங்கிநெடும்பெருஞ் சிமயத்து நீலப்பைஞ்சுனைஐவருள் ஒருவன் அங்கை ஏற்பஅறுவர் பயந்த ஆறமர் செல்வ (255)
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரைமலைமகள் மகனே மாற்றோர் கூற்றேவெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவஇழையணி சிறப்பிற் பழையோள் குழவிவானோர் வணங்குவில் தானைத் தலைவ (260)
மாலை மார்ப நூலறி புலவசெருவில் ஒருவ பொருவிறல் மள்ளஅந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலைமங்கையர் கணவ மைந்தர் ஏறேவேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ (265)
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்துவிண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவபலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறேஅரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருகநசையினர்க் காத்தும் இசைபே ராள (270)
அலாந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்பரிசிலர்த் தாங்கும் உ ருகெழு நெடுவே எள்பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்சூர்மருங் கருத்த மொய்ம்பின் மதவலி (275)
போர்மிகு பொருந குரிசில் எனப்பலயான்அறி அளவையின் ஏத்தி ஆனதுநின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்நின்னடி உ ள்ளி வந்தனன் நின்னோடுபுரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் (280)
குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்வேறுபல் உ ருவிற் குறும்பல் கூளியர்சாறயர் களத்து வீறுபெறத் தோன்றிஅளியன் றானே முதுவாய் இரவலன்வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென (285)
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்திஅணங்குசால் உ யர்நிலை தழீஇப் பண்டைத்தன்மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி (290)
அஞ்சல் ஓம்புமதி அறிவனின் வரவெனஅன்புடை நன்மொழி அளைஇ விளிவின்றிருள்நிற முந்நீர் வளைஇய உ லகத்தொருநீ யாகத் தோன்ற விழுமியபெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன் (295)
வேறுபஃ றுகிலின் நுடங்கி அகில்சுமந்தார முழுமுதல் ஊருட்டி வேரற்பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டுவிண்பொரு நெடுவரை பரிதியிற் றொடுத்ததண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல (300)
அரசினி முதுசுளை கலாவ மீமிசைநாக நறுமலர் உ திர யூகமொடுமாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்றுமுத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று (305)
நன்பொன் மணிநிறங் கிளரப் பொன்கொழியாவாழை முழுதல் துமியத் தாழைஇளநீர் விழுக்குலை உ திரத் தாக்கிக்கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புறமடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் (310)
கோழி வயப்பெடை இரியக் கேழலோடிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்னகுரூ உ மயி ரியாக்கைக் குடாவடி உ ளியம்பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் (315)
றிழுமென இழிதரும் அருவிப்பழமுதிர் சோலை மலைகிழ வோனே (317)
நேரிசைவெண்பா
குன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்புன்றலைய பூதப் பொருபடையாய் – என்றும்இளையாய் அழகியாய் ஏறு\ர்ந்தான் ஏறேஉ ளையாய்என் உ ள்ளத் துறை. (1)
குன்றம் எறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும்அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் – இன்றென்னைக்கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவும்மெய்விடா வீரன்கை வேல். (2)
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்டதீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரிகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்துளைத்தவேல் உ ண்டே துணை. (3)
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா – முன்னம்பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்டதனிவேலை வாங்கத் தகும். (4)
உ ன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்பின்னை ஒருவரையான் பின்செல்லேன் – பன்னிருகைக்கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்வேலப்பா செந்தில்வாழ் வே. (5)
அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் – நெஞ்சில்ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்முருகாஎன் றோதுவார் முன். (6)
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்தம்பியே நின்னுடையே தண்டைக்கால் எப்பொழுதும்நம்பியே கைதொழுவேன் நான். (7)
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்ஆர்க்குப் பரமாம் அறுமுகவா – பூக்கும்கடம்பா முருகா கதிர்வேலா நல்லஇடங்காண் இரங்காய் இனி. (8)
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்கரங்கூப்பிப்க் கண்குளிரக் கண்டு – சுருங்காமலஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்பூசையாக் கொண்டே புகல். (9)
நக்கீரர் தாம் உ ரைத்த நன்முருகாற் றுப்படையைத்தற்கோல நாள்தோறும் சாற்றினால் – முற்கோலமாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்தான் நினைந்த எல்லாம் தரும். (10)
திருச்சிற்றம்பலம்
Also, read
Leave a Reply