பாம்பாட்டி சித்தர் பாடல்கள் – Pambatti Siddhar Padalgal


Pambatti Siddhar Padalgal
பாம்பாட்டி சித்தர் (Pambatti Siddhar) என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.
பாம்பாட்டி சித்தர் பாடல்கள்
கடவுள் வணக்கம்
தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே – சிவன்சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பேஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே – சிவன்அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே. 1
நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றேநித்திய மென்றே பெரிய முத்தி யென்றேபாடுபடும் போதுமாதி பாத நினைந்தேபன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே. 2
பொன்னிலொளி போலவெங்கும் பூரணமதாய்ப்பூவின் மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்வள்ளலடி வணங்கி நின் றாடுபாம்பே. 3
எள்ளிலெண்ணெய் போலவுயி ரெங்கு நிறைந்தஈசன் பதவாசமலர் எண்ணி யெண்ணியேஉள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவேஒடுங்கிய டங்கித்தெளிந் தாடு பாம்பே. 4
அண்டபிண்டந் தந்த வெங்கள் ஆதிதேவனைஅகலாம மேலநினைந் தன்புடன் பணிந்துஎண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியேஏகமன மாகநாடி யாடு பாம்பே. 5
சோதிமய மானபரி சுத்த வஸ்துவைத்தொழுதழு தலற்றிற் தொந்தோந்தோ மெனவேநீதிதவ றாவழியில் நின்று நிலையாய்நினைந்து நினைந்துருகி யாடு பாம்பே. 6
அருவாயும் உருவாயும் அந்தியாயும்அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும்திருவாயுங் குருவாயும் சீவனாயும்செறிந்தவஸ் துவைப்போற்றி யாடு பாம்பே. 7
சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச்சூட்சமதி யாலறிந்து தோஷ மறவேஎட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பைஎடுத்து விரித்துநின் றாடு பாம்பே. 8

எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர்அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்றஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே. 9
குரு வணக்கம்
சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவேதானம் வாங்கி நின்ற வெங்கள் சற்கு ருவினைப்போற்றி மனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்புகர்ந்து புகழ்ந்துநின் றாடாய் பாம்பே. 10
பொய்ம்மதங்கள் போதனைசெய் பொய்க்கு ருக்களைப்புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்மெய்ம்மதந்தான் இன்ன தென்றும் மேவ விளம்பும்மெய்க்குருவின் பதம் போற்றி ஆடாய்பாம்பே. 11
வேதப்பொருளின்ன தென்று வேதங் கடந்தமெய்ப்பொருளைக்கண்டுமனம் மேவிவிளம்பிப்போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்பூரணசற் குருதாள்கண் டாடாய் பாம்பே. 12
உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளைஉண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்கள்ளமனந் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்சுளித்துக் களித்துநின் றாடாய் பாம்பே. 13
அங்கையிற்கண் ணாடிபோல ஆதி வஸ்துவைஅறிவிக்கும் எங்களுயி ரான குருவைச்சங்கையறச்சந்ததமுந் தாழ்ந்து பணிந்தேதமனியப் படமெடுத் தாடாய் பாம்பே. 14
காயம்நிலை யழிகையைக் கண்டு கொண்டுபின்கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்காலமும் வாழும்தூயநிலை கண்டபரி சுத்தக் குருவின்துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே. 15
கூடுவிட்டுக் கூடுபாயுங் கொள்கை யுடையகுருவின் வல்லபமெவர் கூற வல்லவர்வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்மெய்க்குருவைப் பணிந்துநின் றாடாய் பாம்பே. 16
அட்டதிக்கும் அண்டவெளி யான விடமும்அடக்கிய குளிகையோ டாடி விரைவாய்வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே. 17
கற்பகாலங்க டந்தாதி கர்த்தா வோடுங்கடமழி யாதுவாழுங் காரணக்குருபொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்துபூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே. 18

வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்கு மாயினும்வல்லுடம்புக் கோர் குறை வாய்த்தி டாதுமெச்சகட முள்ள வெங்கள் வேத குருவின்மெல்லடி துதித்துநின் றாடாய்பாம்பே. 19
பாம்பினது சிறப்பு
நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பேநச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பேபாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பேபாடிப்பாடி நின்றுவிளை யாடு பாம்பே. 20
வளைபுகும் போதேதலை வாங்கும் பாம்பேமண்டலமிட் டுடல்வளை வண்ணப் பாம்பேதளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பேதலையெடுத் தேவிளையாடு பாம்பே. 21
குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்கரவாமல் உளங்களித் தாடு பாம்பே. 22
மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய்மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாயானாய்கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்கண்ணேசெவி யாகக்கொண்டாய் ஆடு பாம்பே. 23
சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய்சங்கரனுக் காபரணந் தானுமாகினாய்மந்திரத்திற் கடங்கினாய் மண்டல மிட்டாய்வளைந்து வளைந்துநின் றாடு பாம்பே. 24
சித்தர் வல்லபங் கூறல்
எட்டுநாகந் தம்மைக்கையா லெடுத்தேயாட்டுவோம்இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்கட்டுக்கடங் காதபாம்பைக் கட்டி விடுவோம்கடுவிஷத் தன்னைக்கக்கி யாடு பாம்பே. 25
ஆதிசேடன் ஆயிகினுமெம் மங்கையி னாலேஆட்டிவிடு வோமெங்கள் ஆக்கினைக்குள்ளேநீதியோடங்கியே நின்றிடச் செய்வோம்நின்றநிலை தவறாமல் ஆடுபாம்பே. 26
தூணைச்சிறு துரும்பாக தோன்றிடச் செய்வோம்துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்ஆணைபெண்ணும் பெண்ணை யாணு மாகச் செய்குவோம்ஆரவாரித் தெதிராய்நின் றாடு பாம்பே. 27
எட்டுமலை களைப்பந்தாய் எடுத்தெ றிகுவோம்ஏழுகட லையுங்குடித் தேப்ப மிடுவோம்மட்டுப்படா மணலையும் மதித்திடுவோம்மகாராஜன் முன்புநீ நின் றாடுபாம்பே. 28

மண்டலமுற் றுங்கையால் மறைத்து விடுவோம்வானத்தையும் வில்லாக வளைத்து விடுவோம்தொண்டருக்குச் சூனியஞ் சொல்லிக் காட்டுவோம்தோன்றலுக்கு முன்பு நின் றாடாய் பாம்பே. 29
மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கிவருவோம்முந்நீருள் இருப்பினு மூச்ச டக்குவோம்தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்தார்வேந்தன் முன்புநீ நின் றாடு பாம்பே. 30
செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே. 31
வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறுசெய்குவோம்வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்நாங்கள் செய்யும் செய்கையிதென் றாடு பாம்பே. 32
அறுபத்து நாலுகலை யாவு மறிந்தோம்அதற்குமே லொருகலை யான தறிந்தோம்மறுபற்றுச் சற்றுமில்லா மனமு முடையோம்மன்னனே யாசானென் றாடு பாம்பே. 33
சிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்வீறுபெருங் கடவுளை எங்களுடனேவிளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே. 34
சித்தர் சம்வாதம்
வாசுகியை ஒருபக்கம் மன்னநிறுத்திமகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தேதேசுலவு தக்கனைத் தன்றிக்கிற் சேர்த்துச்செய்யபது மனைக்கொள் சித்த னாரே. 35
அனந்தனை யொருபக்க மாக நிறுத்திஅதன்பக்கங் குளிகனை யண்டச் சேர்த்துக்கனங்கொண்ட கார்க்கோடகன் காணக் காட்டுங்கடுஞ்சங்க பாலனைத்தான் சித்த னாரே. 36
அட்டதிக்குஞ் சக்கரங் களாகக் கீறிஅக்கோண நிலைகளி லக்கரஞ் சேர்த்துத்திட்டமுடன் மந்திரத்தைச் செபித்து நில்லும்சித்தந்தடு மாறாதீர் சித்த னாரே. 37
அட்டதிக்குஞ் சக்கரங்க ளமைத்து விட்டோம்அவ்வவற்றிற் சக்கரங்க ளமைத்து விட்டோம்எட்டுநாக மிருக்கின்ற இடத்தில் விட்டோம்இனியென்ன செய்வம்சொல்லும் சித்த னாரே. 38

நடுவாக ஆதிசேடன் றன்னைநாட்டும்நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்கடுவிஷங் கக்கவேயக் கட்செ விகளைக்கையிலெடுத் தாடுங்கள் சித்த னாரே. 39
பொருளாசை விலக்கல்
நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்நடுவன் வரும்பொழுது நாடி வருமோகூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோகூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே. 40
யானைசேனை தேர்ப்பரி யாவு மணியாய்யமன்வரும் போதுதுணை யாமோ அறிவாய்ஞானஞ்சற்று மில்லாத நாய்கட் குப்புத்திநாடிவரும் படிநீநின் றாடுபாம்பே. 41
மாணிக்கமா மணிமுடி வாகு வலயம்மார்பிற்றொங்கும் பதக்கங்கண் மற்றும் பணிகள்ஆணிப் பொன்முத் தாரமம் பொன் அந்தகடகம்அழிவானபொருளெனநின் றாடாய் பாம்பே. 42
மாடகூடமாளிகைகள் வண்ண மண்டபம்மதில்சூழ்ந்த அரண்மனை மற்றும் முள்ளவைகூடவாரா வென்றவந்தக் கொள்கை யறிந்தோர்குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே. 43
மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர்மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோஅலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர்அழியாரென் றேநீ துணிந் தாடாய் பாம்பே. 44
பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும்பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோமஞ்சள் மணம் போய்சுடு நாறுமணங்கள்வருமென்று தெளிந்துநின் றாடாய்பாம்பே. 45
முக்கனியுஞ் சர்க்கரையும் மோத கங்களும்முதிர்சுவைப் பண்டங்களும் முந்தி யுண்டவாய்மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்கமெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே. 46
வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்வண்கவிகை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும்திண்ணமுடன் யமபுரஞ் செல்லுங் காலத்தில்சேரவர மாட்டாவென் றாடாய் பாம்பே. 47
மக்கள்பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்மாளும்போது கூடவவர் மாள்வ தில்லையேதக்கவுல கனைத்தையுந் தந்த கர்த்தனைத்தாவித்தாவித் துதித்துநின் றாடாய் பாம்பே. 48

கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்மேனிலைகண் டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே. 49
பெண்ணாசை விலக்கல்
வெயில்கண்ட மஞ்சள்போன்ற மாத ரழகைவிரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே. 50
செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்சித்தப்பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம்குண்டுகட் டெருமை யேறுங் கூற்றுப் பருந்தைக்கொன்றுதின்று விட்டோமென் றாடாய் பாம்பே. 51
வட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலைமகமேரு என்றுவமை வைத்துக் கூறுவார்கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர்கெடுவரென்றே நீதுணிந் தாடாய் பாம்பே. 52
மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாகவருணித்துச் சொல்வார்மதி வன்மை யில்லாதார்குருநலம் பேசுகின்ற கூகைமாந்தர்கள்கும்பிக்கே இரையாவரென் றாடாய் பாம்பே. 53
சிக்குநாறுங் கூந்தலைச் செழுமை மேகமாய்ச்செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்நெக்குநெக்கு ருகிப்பெண்ணை நெஞ்சில்நினைப்பார்நிமலனை நினையாரென் றாடாய் பாம்பே. 54
நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும்கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்கோனிலையை யறியாரென் றாடாய் பாம்பே. 55
மயிலென்றுங் குயிலென்றும் மாணிக்க மென்றும்மானேயென்றும் தேனேயென்றும் வானமு தென்றும்ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்ஓதாமற் கடிந்துவிட் றாடாய் பாம்பே. 56
மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும்மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும்கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும்கழறாமற் கடிந்தோமென் றாடாய் பாம்பே. 57
பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும்கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும்கூறாமல் துறந்தோம்நாமென் றாடாய் பாம்பே. 58

மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே. 59
சரீரத்தின் குணம்
ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தேஉதிரப் புனலினிலே உண்டை சேர்த்தேவாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்வறகோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே. 60
இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ணஈரைந்து மாதமாய் வைத்த சூளைஅருமையா யிருப்பினு மந்தச் சூளைஅரைக்காசுக் காகாதென் றாடாய் பாம்பே. 61
பரியாசம் போலவே கடித்த பாம்புபலபேரறியவே மெத்த வீங்கிப்பரியார மொருமாது பார்த்த போதுபையோடே கழன்றதென் றாடாய் பாம்பே. 62
சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமுஞ்சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது உடைந்தால்நாயுநரி யும்பெரிய பேயுங் கழுகும்நமதென்றே தின்னுமென் றாடாய் பாம்பே. 63
நீரிலெழும் நீர்க்குமிழி நிலைகெ டல்போலநில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றேபாரிற் பல உயிர்களைப் படைத்த வன்றனைப்பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே. 64
நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்நாளுங்கழு வினுமதன் நாற்றம் போமோகூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால்கொண்ட மலம் நீங்காதென் றாடாய் பாம்பே. 65
காய்த்தமர மதுமிக்க கல்லடிப்படும்கன்மவினை கொண்டகாயம் கண்டனை பெறும்வாய்த்ததவ முடையவர் வாழ்பவ ரென்றேவத்துத்திரு வடிதொழு தாடாய் பாம்பே. 66
பேசரிய நவவாயிற் பீற்றல் துருத்திபெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண் டாச்சேஈசனிலை அறியாருக் கிந்தத் துருத்திஎரிமண்ணிற் கிரைமென் றாடாய் பாம்பே. 67
மரப்பாவை போல வொரு மண்ணுருச் செய்துவளமான சீவனென்னுஞ் சூத்திரம் மாட்டித்திரைக்குள்ளி ருந்தசைப்போன் தீர்ந்த பொழுதேதேகம்விழு மென்றுதெளிந் தாடாய் பாம்பே. 68

தசநாடி தசவாயு சத்த தாதுசார்ந்தமரக் கப்பலது தத்தி விழுமேஇசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்எந்நாளும் ஓட்டத்துணிந் தாடாய் பாம்பே. 69
அகப்பற்று நீக்கல்
தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காததன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத்தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே. 70
கள்ளங் கொலை காமமாதி கண்டித்த வெல்லாம்கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்துதெள்ளிதான வெட்டவெளி சிற்சொ ரூபத்தைத்தேர்ந்துபார்த்துச் சிந்தைதெளிந் தாடாய் பாம்பே. 71
சொல்லும்புளி யம்பழத்தி னோடு போலவேசுற்றத்திருந் தாலுமவர் தொந்தங் களற்றுநில்லுமன மேநீபர நின்ம லத்திலேநின்றுணைதான் வெறும்பாழென் றாடாய் பாம்பே. 72
சேற்றில் திரிபிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல்போல்தேசத்தோ டொத்துவாழ்வார் செய்கை கண்டபின்சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியேதானடக்க வேணுமென் றாடாய் பாம்பே. 73
எண்ணெய்குந் தண்ணீர்க்குந் தொந்தமில்லா வாறுபோல்எப்போதும் இப்புவியி லெய்த வேண்டும்கண்ணுக்குக் கண்ணான வொளிகண்டு கொள்ளவேகட்டறுத்து வாழ்ந்திடநின் றாடாய் பாம்பே. 74
கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள்கண்களுக்கு சுத்தமான காட்சி போலவேசிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச்சீர்பாதங் காணத்தெளிந் தாடாய் பாம்பே. 75
கோபமென்னும் மதயானை கொண்ட மதத்தைகூர்கொள்யுத்தி அங்குசத்தாற் கொன்று விட்டோங்காண்தீபமென்னுஞ் சிற்சொரூப செய்ய பொருளைச்சேர்ந்துறவு கொண்டோமென் றாடாய் பாம்பே. 76
நித்தியமென் னுமலையில் நின்று கொண்டோம்யாம்நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்சத்தியமாய் எங்கள் கடந்தானழி யாதேசந்ததமும் வாழ்வோமென் றாடாய் பாம்பே. 77
மனமென்னுங் குதிரையை வாகன மாக்கிமதியென் னுங்கடிவாளம் வாயிற் பூட்டிச்சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித்தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே. 78

ஆசையென்னுஞ் செருப்பின்மேல் அடிமை வைத்தேஆங்கார முட்காட்டை அறவே மிதித்தேகாசையெனுந் துர்குணத்திற் கனலைக் கொளுத்திக்காலாகாலங் கடந்தோமென் றாடாய் பாம்பே. 79
காலனெனுங் கொடிதான கடும்ப கையைநாம்கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம்தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்தற்பரங் கண்டோமென் றாடாய் பாம்பே. 80
தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்துதிகையாமற் சிற்சொரூப தெரிச னைகண்டுவானிற் பறந் திடச்சூத வான்ம ணிதீர்ந்துவாயிற்போட் டேகநீநின் றாடாய் பாம்பே. 81
தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன்சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்தாக்கிய சிரசின்மேல் வைத்த பாதம்சற்குருவின் பாதமென் றாடாய் பாம்பே. 82
ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பேஅரசடிப் பொந்திலே புகுந்து கொண்டாய்வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்துவாங்கியே தூங்கிநின் றாடாய் பாம்பே. 83
நாலு தெருவினிலே நாலு கம்பம்நடுத்தெரு வினிலேயோ பொன்னுக் கம்பம்போலும் விளங்குபொன்னுக் கம்பத்தி னுக்கேபூமாலை சூட்டிநின் றாடாய் பாம்பே. 84
ஆழிபெயர்ந் தாலுமேரு மட்டேயலையும்அடியோடு பெயர்ந்தாலு மன்றிக் காலஊழிபெயர்ந்து தாலுமதி யுண்மைப் படிக்கேஉறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே. 85
வாயுவினை இரையாக வாங்கி உண்டேவருடிக்கு நீரினை வாயுள் மடுத்தேதேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில்திகைப்பறச் சேர்ந்துநின் றாடாய் பாம்பே. 86
மாசில்கதி வளையிலே மண்டல மிட்டேமதியான பெரும்பட மடலை விரித்தேஆசில்பரா பரமான ஆதி பாதத்தைஅடுத்தடுத் தேதுதித் தாடாய் பாம்பே. 87
காடுமலை நதிபதி காசி முதலாய்க்கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோவீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவேவேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே. 88

எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்திஎய்துவது தொல்லுலகில் இல்லை யெனவேகள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்கண்டு தொழுதேகளித் தாடாய் பாம்பே. 89
சூரியனைக் கண்டபனி தூர வோடல்போல்சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில்ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன்அகலாமற் பற்றித் தொடர்ந் தாடாய் பாம்பே. 90
காந்தம்வலி யிரும்புபோல் காசில் மனத்தைக்காட்சியான வஸ்துவுடன் கலக்கச்சேர்த்துச்சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச்சலியாமற் தொடர்ந்து நின் றாடாய் பாம்பே. 91
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சிஉலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சிபுளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம்போகாது மூடருக்கென் றாடாய் பாம்பே. 92
திரளான போரிலூசி தேடல் போல்முத்திசிக்காது தேசாசார தேசிகர் தம்மால்அருளான மூலகுரு வையர் செயலால்ஆனந்தங் கொண்டோமென் றாடாய் பாம்பே. 93
ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையேநாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தேநாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே. 94
தன்னையறிந் தொழுகுவார் தன்னை மறைப்பார்தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்பின்னையொரு கடவுளைப் பேண நினையார்பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே. 95
பாலிற்சுவை போலுமெங்கும் பாய்ந்த வொளியைப்பற்றுப்பொன் பற்றவைத்த பான்மை போலேகாலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டுகளித்துக் களித்துநின் றாடாய் பாம்பே. 96
தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின்தேகபந்தம் கொண்டனமித் தேச வாழ்வினைஓக்காளமென் றெண்ணிமிகு மோகை யுடனீஉள்ளந் தெளிந்துநின் றாடாய் பாம்பே. 97
சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பலதந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்விதம்வித மானவான வேறு நூல்களும்வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே. 98

சமயபேதம் பலவான சாதி பேதங்கள்சகத்தோர்க்கே யல்லாதுசற் சாதுக் களுக்கோசிமயத்தி லேறினபேர் சித்த மாறுமோசித்தர்சித் தாந்தந்தேர்ந் தாடாய் பாம்பே. 99
பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோபூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவைஅடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே. 100
மூலவேர றிந்துகொண்டால் மூன்று லகமும்முன்பாகவே கண்டுநித்ய முத்தி சேரலாம்சாலவேர றிந்ததாலே தான்பய னுண்டோசகத்தைப்பொய் யென்றுதெளிந் தாடாய் பாம்பே. 101
சகத்தனாதி யென்றிடாது தான னாதியார்சமைந்ததென் றுரைப்பார்கள் சத்தை யறியார்மகத்துவ நிலைகற்ப வன்மை யல்லாதுமற்றும் வன்மை யில்லையேயென் றாடாய் பாம்பே. 102
ஆயிரத்தெட்டி தழ்வீட்டி லமர்ந்த சித்தன்அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன்காயமில்லா தோங்கிவளர் காரணச் சித்தன்கண்ணுளொளி யாயினானென் றாடாய் பாம்பே. 103
நாற்பத்துமுக் கோணநிலை நாப்ப ணதாகநாடுமக்க ரச்சொரூப நாய கன்தனைமேற்படுத்திக் கொண்டாலந்த மேலு லகெலாம்மெல்லடிக்குத் தொண்டேயாமென் றாடாய் பாம்பே. 104
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களேவிண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களேகொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார்கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே. 105
ஆறுகலைக் குச்சுக்குள்ளே ஆடுமொருவன்அயல்வீடு போகுமுன்னே அரண்கோ லிக்கொள்ளுவேறுபட்டால் அவன்றனை மீட்ட லரிதேமேவிமுன்னே விடாதுகொண் டாடாய் பாம்பே. 106
எண்ணரிய புண்ணியங்கள் எல்லாஞ் செய்துமென்ஏகனடி நெஞ்சமதி லெண்ணா விடிலேபண்ணரிய தவப்பயன் பத்தி யில்லையேற்பாழ்படு மென்றுதுணிந் தாடாய் பாம்பே. 107
எவ்வுலகுஞ் சொந்தமதாய் எய்தும் பயனென்எங்களாதி பதாம்புயம் எண்ணாக் காலையில்இவ்வுலக வாழ்வுதானு மின்றே அறுமென்றுஎண்ணிக்கர்த்தன் அடிநினைந் தாடாய் பாம்பே. 108

மணக்கோலங் கொண்டுமிக மனம கிழ்ந்துமேமக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்பிணக்கோலங் கண்டுபின்னுந் துறவா விட்டால்பிறப்புக்கே துணையாமென் றாடாய் பாம்பே. 109
பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான்பெருமருந் தொன்று சொல்வேன் பெட்புடன் கேளாய்திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்திறந்திடும் வகையறிந் தாடாய் பாம்பே. 110
இறந்தவர் ஐவரவர் இட்ட மானவர்எய்தும்அவ ரிறந்தாரென் றெல்ல வார்க்குஞ்சொல்மறந்தவர் ஒருவரென்றே மண்ணினி லுள்ளோர்வகையறிந் திடவேநின் றாடாய் பாம்பே. 111
நான்கடிச் செய்யுள்
ஆகார முதலிலே பாம்ப தாகஆனந்த வயலிலே படம் விரித்தேஊகார முதலிலே யொத்தொ டுங்கிஓடி வகாரத்தி னாவை நீட்டிச்சீகாரங் கிடந்ததோர் மந்திரத் தைச்சித்தப்பி டாரனார் போதஞ் செய்யமாகாரப் பிறப்பையும் வேர றுத்துமாயபந்தங் கடந்தோமென் றாடாய் பாம்பே. 112
தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறிவார்தனிமந்தி ரஞ்சொல்லுவார் பொருளை யறியார்மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்.அந்தரஞ் சென்றுமே வேர்பி டுங்கிஅருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தேஇந்த மருந்தினைத் தின்பீ ராகில்இனிப்பிறப் பில்லையென் றாடாய் பாம்பே. 113
களிமண்ணி னாலொரு கப்பல் சேர்த்தேகனமான பாய்மரங் காண நாட்டிஅளிபுலந் தன்னையே சுக்கா னாக்கிஅறிவென்னு மாதாரச் சீனி தூக்கிவெளியென்னும் வட்டத்தே யுள்ள டக்கிவேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்தெளிவுறு ஞானியா ரோட்டுங் கப்பல்சீர்பாதஞ் சேர்ந்ததென் றாடாய் பாம்பே. 114
உள்ளத்துக் குள்ளே யுணர வேண்டும்உள்ளும் புறம்பையு மறிய வேண்டும்மெள்ளக் கனலை யெழுப்ப வேண்டும்வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்கண்ணுக்கு மூக்குமேற் காண நின்றுதெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்சீர்பாதம் கண்டோமென் றாடாய் பாம்பே. 115
ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலேஉள்ளும் புறம்பையு மறியவேண்டும்ஆங்காரக் கோபத்தை யறுத்து விட்டேஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டேசாங்கால மில்லாமற் தாணு வோடேசட்டதிட்ட மாய்ச்சேர்ந்து சாந்த மாகத்தூங்காமல் தூங்கியே சுக மடைந்துதொந்தோம் தொந்தோமென் றாடாய் பாம்பே. 116
விரகக் குடத்திலே பாம்ப டைப்போம்வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம்காரணங்க ளைப்பிடுங்கி இரைகொ டுப்போம்காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம்துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும்சுற்றிவலம் வந்து நித்ய சூட்சங் கண்டும்உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்டோம்ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே. 117
காயக் குடத்திலே நின்ற பாம்பைக்கருணைக் கடலிலே தியங்க விட்டுநேயச் சுழுமுனை நீடு பாய்ச்சிநித்யமான வஸ்துவை நிலைக்க நாடிமாயப் பெருவெளி தன்னி லேறிமாசற்ற பொருளினை வாய்க்கத் தேடிஆயத் துறைகடந் தப்பாற் பாழின்ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. 118

மூலத் தலத்திலே நின்ற கருத்தைமுற்றுஞ் சுழுமுனை தன்னி லூடேமேலத் தலத்திலே விந்து வட்டம்வேலை வழியிலே மேவி வாழும்பாலத் திருத்தாய்க் கருணை யதனால்பரகதி ஞானசொ ரூபமாகிஆலச் சயனத்து மாலுட னின்றேஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. 119
புலனைந்து வீதியில் வையாளி பாயும்புரவி யெனுமனதை ஒருமைப் படுத்திமலபுந்த வுலகங் கடந்த தாலேமன்னுகுரு பாதத்தி னிலையை நாடித்தலமைந்து பூலோகங் கடந்த தாலேசந்திர மண்டலமுங் கடந்த தாகும்அலமந்து பூலோகக் கடலை நீக்கிஆனந்த மாகிநின் றாடாய் பாம்பே. 120
குருவென்னும் ஆசானி னுருவெ டுத்துக்குறியான ஞானந்துப் பாக்கியாக்கிஅருளென்னும் அருளையே உண்டை யாக்கிஆனந்த மாகவே அதைக்க டந்தேமருளென்னு மாதர்மன நெறியைத் தொட்டுவாங்காம லெரிந்திட நெட்டை யிட்டுபருவளைக் குள்ளேயே பட்ட தென்றேபற்றானைப் பற்றிநின் றாடாய் பாம்பே. 121
கன்னான் குகையிலே கான்ம றிப்போம்கருமா னுலையிலே தீயை மூட்டுவோம்சொன்னார் தலையிலே பொன்னை யாக்குவோம்கருதி யருகல்வி ஒப்பஞ் செய்வோம்மின்னார்கள் பாசத்தை விட்டே யெரிப்போம்மெய்ப்பொருட் குறிகண்டு விருப்பை யடைவோம்பன்னாதே பன்னாதே சும்மா விருந்துபராபரஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. 122
சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்வேண்டாத மனையினி லுறவு செய்வோம்சோதித் துலாவியே தூங்கி விடுவோம்சுகமான பெண்ணையே சுகித்தி ருப்போம்ஆதிப் பிர்மர்கள் ஐந்து பேரும்அறியார்கள் இதையென் றாடாய் பாம்பே. 123
நெட்டெழுத் ததனிலே நிலைபி டித்துநீங்கா வெழுத்திலே வாலை முறுக்கிவிட்டவ் வெழுத்திலே படம்வி ரித்துவிண்ணின் வழியிலே மேவி யாடிப்பட்ட வெழுத்தையும் பதிந்தி ருப்போம்பன்னிரண் டாமெழுத்தினிற் பன்னிக் கூடித்திட்டமுட னெமக்கருள் தேசிக னார்தம்சீர்பாதஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. 124
ஊசித்துளைக் குடத்தினிற் பாம்பை யடைப்போம்உலகெலாஞ் சுற்றி யுலாவிவருவோம்மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம்மனமொத்த வெளியிலே விட்டே யாட்டுவோம்மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்மனமுற்ற உச்சியிலேறி யாடுவோம்பேசு மெழுத்தையும் விழுங்கி விடுவோம்பிறப்பிறப் பற்றோமென் றாடாய் பாம்பே. 125
ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்அக்கினிக் கோட்டைமே லேறிப் பார்ப்போம்மாணிக்கத் தூணின்மேல் விட்டே யாட்டுவோம்மனம்வாக்குக் காயத்தை யிரைகொ டுப்போம்நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்நமனற்ற நாதன்பதம் நாடியே நிற்போம்ஏணிப் படிவழிகண் டேறி விடுவோம்யாருமிதை அறியாரென் றாடாய் பாம்பே. 126
வடக்குங் கிழக்குமாக நூலை யிழைப்போம்மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்நடக்கும் வழியினிலே யுண்டைசேர்ப்போம்நடவா வழியினிலே புடவை நெய்வோம்குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்கொய்ததை எங்குமே விற்று விடுவோம்அடக்கியே யேகத்துளே வைக்கவும் வல்லோம்ஆதிபதங் கண்டோமென் றாடாய் பாம்பே. 127
சூத்திரக் குடத்திலே பாம்பை யடைப்போம்சுழுமுனைக் குள்ளேயோ சுகித்தி ருப்போம்பாத்திரங் கொண்டுமே பலியி ரப்போம்பத்தெட்டு மூன்று படிகட ந்தோம்ஊத்தைச் சடலத்தினைப் புடமே யிடுவோம்உளவ னெமக்குநல் லுறுதி சொல்லப்பார்த்துரை யிதன்மெய் பலிக்க வெண்ணிப்பதனம் பதனமென் றாடாய் பாம்பே. 128

மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்மணிவட்ட வாசியை வாரி யுண்டோம்வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்வக்கிர சொர்ப்பனந் தாண்டி விடுவோம்பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம்பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்சிவ்வுரு வாகியே நின்றோ மென்றேசீர்பாதங் கண்டுதெளிந் தாடாய் பாம்பே. 129
பாம்பாட்டி சித்தர் பாடல்கள் முற்றிற்று

No comments

Leave a Reply