ஸ்ரீ வாராஹி மாலை – Varahi Malai Lyrics in Tamil


Sri Varahi Malai
ஸ்ரீ வாராகி மாலை
வேம்பத்தூரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அம்பிகையின் மந்திரத்தை லட்சம் முறை உருவேற்றியதால், அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து, அருள்பாலித்தாள். இதனால், கவிஞராக மாறிய இவரை, கவிராஜ பண்டிதர் என்றே அழைத்தனர். இவர் தான், ஆதிசங்கரரின், சவுந்தர்யலஹரி பாடல்களை, தமிழில் மொழி பெயர்த்தவர். தற்போது பிரபலமாகி வரும், ‘வராஹி மாலை’ எனும் மந்திர துதி நூலை, அருளியவர்.
வாராஹி மாலை பயன்கள்: பேய், பிசாசு, பில்லி மற்றும் சூன்யம் முதலான கொடுமைகளில் இருந்து, விடுதலை அளிக்கும் அருள் நூலிது. அம்பிகை நமக்கும் நல் உணர்வை ஊட்ட வேண்டுமென்று வேண்டுவோம்; அவள் நிச்சயம் ஊட்டுவாள்.
இப்பாடல்களை தினசரி பாடி வழிபடுவோர்களுக்கு எல்லா வகையான பலன்களும் அளவற்ற செல்வமும் திரண்டு கிடைக்கும். ஓம் வாராகியே போற்றி.
Also, read: வராகி அம்மன் வரலாறு & மூல மந்திரம்
Varahi Malai Lyrics in Tamil
வாராஹி மாலை பாடல் வரிகள்
1. வசீகரணம் (தியானம்)
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லிமரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.
2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்துஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவேஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
3. பகை தடுப்பு (பிரதாபம்)
மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டுகைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறிவச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.
4. மயக்கு (தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமைஅடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதிகுடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.
6. உச்சாடணம் (ரோகஹரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரைநோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரைநாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.
7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சேவாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.
8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமேஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னிமாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
9. பகை முடிப்பு (வித்வேஷணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.
10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்துகூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.
11. தேவி வருகை (பூதபந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்துபொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.
12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றேஇத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவேநித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே
13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்திநஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்குவஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.
14. மந்திரபூஜை (முனிமாரணம்)
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்துவிதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.
15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சைமெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரேவையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!
17. வாழ்த்துதல் (உலக மாரணம்)
வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமைஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.
20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்துதீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.
22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலைநெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலைஉரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே
23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)
ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடுயாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டுகாரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டுவாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.
24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரைநெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.
27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தேஅந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.
28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்றமருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரைநெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.
29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்துநீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇருகூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.
30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னேசரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டிஎரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.
31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்றுகாத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.
32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரைஅவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்குநலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
அன்னை வாராகி உங்களை காக்கட்டும். ஓம் வாராகியே போற்றி.. போற்றி..!

No comments

Leave a Reply