தேய்பிறை சஷ்டி முருகன் மந்திரம் | theipirai sasti murugan manthiram in tamil

தேய்பிறை சஷ்டி முருகன் மந்திரம் | theipirai sasti murugan manthiram in tamil

Qries





– Advertisement –

செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை சஷ்டி திதியான இன்று இரவுக்குள் முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை நாம் கூறி வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினை தீருவதோடு, நிலம் தொடர்பான பிரச்சனைகளும் தீரும், திருமண பாக்கியம் கைகூடும், குழந்தை வரம் கிடைக்கும்,சொந்த வீடு அமையும் யோகம் உண்டாகும். இப்படி முருகப்பெருமானால் பலவித நன்மைகளை அனுபவிக்க கூடியவர்களாக நாம் திகழ்வோம். அப்படிப்பட்ட முருகனின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேய்பிறை சஷ்டி முருகன் மந்திரம்
முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையோடு முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியும் வந்திருக்கிறது. இன்றைய நாளில் பலரும் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ விரதம் இருக்காமல் வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் வீட்டிலேயே வழிபாடு செய்கிறார்கள். ஒரு சிலர் அருகில் இருக்கக்கூடிய முருகனின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். எப்படி வழிபாடு செய்தாலும் முருகனின் அருள் என்பது கிடைக்கும். அப்படி முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கவும் அதே சமயம் நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறவும் தங்களுடைய வழிபாட்டோடு சொல்ல வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
– Advertisement –

சஷ்டி திதி என்பது இன்று முழுவதும் இருக்கிறது என்பதால் இந்த மந்திரத்தை இரவு படுக்கச் செல்வதற்கு முன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். மேலும் எந்த திசையை பார்த்து வேண்டுமானால் கூறலாம். ஏதாவது ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு குறைந்தபட்சம் ஆறு முறை அதிகபட்சம் தங்களால் எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை இந்த மந்திரத்தை கூறினால் போதும். முருகனை முழுமனதோடு நம்பி கூற வேண்டும் என்பது மட்டுமே இதற்கு மிகவும் முக்கியம்.
இவ்வாறு இந்த மந்திரத்தை கூறிவிட்டு நமக்கு என்ன தேவையோ என்ன வேண்டுமோ அதை முருகப்பெருமானிடம் கேட்க வேண்டும். இது மந்திரமாக மட்டுமில்லாமல் முருகனின் திருநாமங்களை கூறுவதற்குரியதாகவும் திகழ்கிறது என்பதால் இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்த வித தடைகளும் கிடையாது. பெண்கள் மாதவிலக்கான சமயத்தில் கூட இந்த மந்திரத்தை கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
– Advertisement –

மந்திரம்
“ஓம் சக்தி ஷண்முகாய ருத்ர குமாராய கௌரி சுதாய சரவணபவாய நமஹ”
இதையும் படிக்கலாமே:எடுத்த காரியம் வெற்றி பெற வாராகி மந்திரம்
மிகவும் எளிமையான இந்த முருகப்பெருமானின் நாமங்களை மந்திரமாக முருகப்பெருமானை மனதார நினைத்து இன்று இரவுக்குள் உச்சரிப்பவர்களுக்கு முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தடைப்பட்டு இருக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் தடை இன்றி நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –








Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top