நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷ மந்திரம்

துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷ மந்திரம்


– Advertisement –

சிவபெருமான் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரதோஷ வழிபாடுகள் சிவபெருமானை வழிபட பல நாட்கள் இருந்தாலும் நம்முடைய பாவங்கள் கர்மாக்கள் அனைத்தும் தொலைந்து போகவும் சிவபெருமானின் அருளை முழுமையாக பெறவும் இந்த பிரதோஷ வழிபாடு முதன்மையானதாக உள்ளது. அப்படியான இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானின் அருளை பெறுவதோடு நம்முடைய துன்பங்கள் நீங்க எளிமையான ஒரு மந்திர வழிபாடு உள்ளது அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
துன்பம் தீர மந்திரம்
நம்முடைய வழிபாட்டு முறைகளில் பொதுவாகவே மந்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது ஒரு வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை சொல்லும் பொழுது நமக்கும் அதற்கான பலன் உடனே கிடைக்கும் என்பது தான் இதற்கான ஐதீகம். அந்த வகையில் இன்று நாம் சிவபெருமானை வணங்கக் கூடிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
– Advertisement –

இந்த மந்திரத்தை இன்றைய நாள் முழுவதிலும் உங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் சொல்லலாம். ஆனால் பிரதோஷம் என்றாலே அதற்குரிய கால நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி வரை தான் இந்த நேரத்தில் நாம் சொல்லும் பொழுது இதற்கான பலன் அதிகமாகவே கிடைக்கும். அதே போல் இந்த நேரத்தில் சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்தவாறு சொல்வது இன்னும் சிறப்பானதாக அமையும். எங்களால் ஆலயம் செல்ல முடியாது என்பவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சொல்லலாம் தவறில்லை.
அதே போல் இந்த மந்திரத்தை சொல்வதற்கு எந்த தீட்டும் இல்லை. ஆலயம் செல்ல முடியாதவர்கள் மாதவிலக்கானவர்கள் என அனைவருமே சிவபெருமானை நினைத்து மனதார இந்த மந்திரத்தை சொல்லலாம். வீட்டில் சொல்வதாக இருந்தால் சொல்லும் பொழுது உங்கள் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு அமர்ந்து கொள்ளுங்கள். இந்த தீபம் கிழக்கு நோக்கி எரியட்டும் நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு செல்லலாம்.
– Advertisement –

என்ற இந்த மந்திரத்தை தான் நீங்கள் 108 முறை சொல்ல வேண்டும் ஓம் நமசிவாய என்று நாம் ஒரு முறை சொன்னாலே போதும் ஒரு கோடி நன்மைகளை வாரி வழங்குவார். அப்படியான சிவபெருமானை இன்றைய தினத்தில் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லும் பொழுது நம் வாழ்வில் நடக்கக் கூடிய மாற்றத்தை பற்றி சொல்லி தெரிய தேவையில்லை.
இதையும் படிக்கலாமே: ஆஷாட நவராத்திரி வழிபாடு
நம்முடைய பாவங்கள் துன்பங்கள் கஷ்டங்கள் கடன் துரோகம் என எப்பேர்பட்ட பிரச்சனையில் நீங்கள் உணர்ந்து கொண்டிருந்தாலும் இன்றைய நாளில் சிவபெருமானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள் நிச்சயம் உங்கள் துன்பங்கள் தேடுவதற்கான வாய்ப்பு உடனே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சொல்லி பலன் அடையுங்கள்

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online