ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய மந்திரம்

ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய மந்திரம்

Qries

– Advertisement –

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் இன்றைய நாளில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்றுதான் யோசிப்போம். ஒவ்வொருவருக்கும் பலவிதமான வேலைகள் இருக்கும். அந்த வேலைகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அந்த வேலையை செய்ய ஆரம்பிப்போம். ஆனால் அந்த வேலையில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பலருக்கும் அது வெற்றியை தராமல் போகக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காலையில் யார் முகத்தில் விழித்தோமோ என்ற ஒரு சொல்லை கூட நாம் சொல்லி இருக்கிறோம். தங்களுடைய வாழ்க்கையில் துரதசத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அதிர்ஷ்டத்தை பெறவும் நிம்மதியான மகிழ்ச்சிகரமான சிறப்பான நாளை தொடங்கவும் சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய மந்திரம்
நம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய காரியத்தில் வெற்றி பெற வேண்டும் எந்தவித தடைகளும் வரக்கூடாது என்பதற்காக தினமும் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வோம். ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த அளவிற்கு தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். ஒரு சிலர் விளக்கை மட்டும் ஏற்றிவிட்டு வழிபாடு செய்து விடுவார்கள். இன்னும் சிலரோ தெய்வங்களுக்குரிய போற்றிகள் கூறி வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரும் மந்திரத்தை கூறி வழிபாடு செய்வார்கள். எந்த அளவிற்கு நாம் நமக்கு தெரிந்த அளவிற்கு மந்திரத்தை உச்சாடனம் செய்து வழிபாடு செய்கிறோமோ அதற்கேற்றார் போல் நமக்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விதமான மந்திரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் நாம் தொடங்கும் நாள் சிறப்பான நாளாக அமைவதற்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
– Advertisement –

ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாக அமைய வேண்டும் என்பதற்காக பலரும் பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அந்த வழிமுறைகளில் ஒன்றாக திகழ்வதுதான் வாராகி அம்மன் வழிபாடு. கலியுகத் தெய்வமாக திகழக்கூடிய வாராகி அம்மனை நாம் முழுமனதோடு தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தோம் என்றால் அந்த அம்மனின் அருளால் அன்றைய நாள் முழுவதும் நமக்கு நல்ல ஒரு சிறப்பான நாளாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த மந்திரத்தை காலையில் எழுந்த உடனே குறைந்தது ஒரு நிமிடமாவது கூற வேண்டும். இந்த மந்திரத்தை நிறுத்தி நிதானத்துடன் 11 முறை கூட கூறலாம். 11 முறை என்ற எண்ணிக்கையை கணக்கிட்டால் முழு மனதுடன் கூற முடியாது என்ற காரணத்தினால் ஒரு நிமிடத்தில் இருந்த ஐந்து நிமிடம் வரை நிறுத்தி நிதானமாக இந்த மந்திரத்தை கூற வேண்டும். இப்படி இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் வாராஹி அம்மனின் அருள் அன்றைய நாள் முழுவதும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நாம் எடுக்கும் முயற்சிகளில் நமக்கு வெற்றிகள் உண்டாகும் என்றும் நல்ல நோக்கத்துடன் எந்த செயலில் ஈடுபட்டாலும் அந்த செயலில் வெற்றி பெற முடியும் என்றும் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் விலகும் என்றும் பணவரவில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
மந்திரம்
சர்வ மங்களா தேவி நமோ நமஹ
இதையும் படிக்கலாமே:இழந்ததை மீட்டுத் தரும் முருகன் மந்திரம்இந்த எளிமையான ஒரு வரி மந்திரத்தை தினமும் தங்களால் இயன்ற அளவு எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுவதன் மூலம் வாராஹி அம்மனின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் நம் வாழ்வில் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top