
நம்முடைய சருமத்திற்கும் கண்பார்வைக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின் மற்றும் ரத்த சோகையை நீக்கக்கூடிய இரும்பு சத்தும், எலும்புகளை வலுப்படுத்தக்கூடிய கால்சியம் என்று பலவிதமான சத்துக்களை உள்ளடக்கியதாக திகழக்கூடிய ஒரு சிறுதானியம் தான் கம்பு. இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய அனைத்து பெண்களும் கண்டிப்பான முறையில் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான சிறுதானியம் என்றால் அது கம்பு தான். இந்த கம்பை வைத்து பலவிதமான உணவுப் பொருட்களை செய்யலாம். அவற்றுள் ஒன்றான கம்பு ஆப்பம் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்கம்பு – ஒரு கப்இட்லி அரிசி – ஒரு கப்பச்சரிசி – 1/2 கப்உளுந்து – 1/4 கப்வெந்தயம் – சிறிதளவுஅவல் – 1/4 கப்,உப்பு – தேவையான அளவுதேங்காய் பால் – தேவையான அளவு – Advertisement -செய்முறைமுதலில் கம்பை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி நல்ல தண்ணீரூற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரண்டரை மணி நேரம் ஆன பிறகு வெள்ளை அவல் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு நல்ல தண்ணீர் ஊற்றி அதை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.மூன்று மணி நேரம் கழித்து இவை அனைத்தும் நன்றாக ஊறி இருக்கும். இதை கிரைண்டரில் போட்டு ஆப்ப மாவு பதத்திற்கு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவை பாத்திரத்தில் மாற்றி அதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கரைத்து ஆறிலிருந்து ஏழு மணி நேரம் புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக ஆப்பம் என்றாலே அதற்கு தொட்டுக் கொள்வதற்கு தேங்காய் பால் அல்லது குருமா தான் பலரும் செய்வார்கள். – Advertisement – தேங்காய் பாலை சேர்த்து நாம் செய்யும்பொழுது அதற்கு அதிக அளவில் சத்துக்கள் இருக்கும். அதனால் அதிகளவில் நமக்கு சத்துக்கள் கிடைக்கும். அப்படி நாம் தேங்காய் பால் எடுக்கும் பொழுது மூன்று முறை எடுப்போம். மூன்றாவதாக எடுக்கக்கூடிய தேங்காய் பாலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆப்பம் சுடும்பொழுது ஆப்ப மாவில் இந்த கடைசி தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கலந்து ஆப்பம் ஊத்தினோம் என்றால் அது அதிக அளவில் சுவை மிகுந்ததாக இருக்கும்.அனைத்து மாவிலும் தேங்காய் பாலை சேர்க்காமல் அந்த நேரத்தில் தேவைப்படக்கூடிய மாவை மட்டும் தனியாக எடுத்து அதில் தேங்காய் பாலை கலந்து நம் ஆப்பம் சுடும் பொழுது மற்ற மாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சாதாரணமாக ஆப்பம் செய்வதை விட இப்படி சிறுதானிய வகைகளை சேர்த்து நாம் ஆப்பம் செய்யும்பொழுது அந்த சிறுதானியத்தின் சத்தும் நமக்கு சேர்ந்து கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களும் எப்பொழுதும் போல் விரும்பி சாப்பிடுவார்கள்.இதையும் படிக்கலாமே:புதிய சமையல் குறிப்புகள் 10பலவிதமான சத்துக்கள் நிறைந்த கம்பையும் அதேசமயம் தாய்ப்பாலுக்கு இணையான சத்து மிகுந்த தேங்காய் பாலையும் சேர்த்து இன்றைய வளரும் குழந்தைகளுக்கு நாம் தரும் பொழுது அதைவிட சிறப்பான உணவு எதுவும் இருக்க முடியாது. மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த முறையில் நாம் செய்து கொடுத்து நம் வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam