
– Advertisement –
மாசி மாதத்தில் வரக்கூடிய சிறப்பு மிகுந்த விரத நாட்களில் ஒன்றாக தான் காரடையான் நோன்பு திகழ்கிறது. இது மார்ச் மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் பலரும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை பெற வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து அம்பாளை வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்பவர்கள் அம்பாளுக்கு நெய்வேத்தியமாக காராமணியை பயன்படுத்தி அடை செய்து வைப்பார்கள். அந்த அடையை இனிப்பு அடையவும் செய்யலாம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் காராமணி இனிப்பு அடை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
காராமணி – 1/4 கப்அரிசி மாவு – ஒரு கப்வெல்லம் – ஒரு கப்,நெய் – ஒரு ஸ்பூன்தேங்காய் துருவியது – 2 ஸ்பூன்ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
– Advertisement –
செய்முறை
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் காராமணியை சேர்த்து அதன் நிறம் மாறும் அளவு வறுக்க வேண்டும். பிறகு அதை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மற்றொரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசி மாவை போட்டு மூன்றில் இருந்து நான்கு நிமிடம் நன்றாக வறுக்க வேண்டும். அரிசி மாவில் நிறம் மாற தேவையில்லை வாசனை வரும் வரை வறுத்தால் போதும்.
வாசனை வந்த பிறகு இதை எடுத்து தனியாக வைத்து விடுங்கள். அதே கடாயை அடுப்பில் வைத்து பொடித்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து எந்த கப்பில் நாம் வெல்லத்தை அளந்தோமோ அதே கப்பில் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து நன்றாக சூடு பண்ண வேண்டும். வெல்லம் கரைந்ததும் அதையும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி நெய் உருகியதும் துருவி வைத்திருக்கும் தேங்காயை அதில் சேர்த்து வதக்க வேண்டும். தேங்காயின் பச்சை வாடை போனால் போதும். தேங்காயின் பச்சை வாடை போன பிறகு நாம் கரைத்து வைத்திருக்கும் வெல்லக் கரைசலை வடிகட்டி அதில் சேர்த்து பிறகு அதில் ஏலக்காய் தூள் மற்றும் வேக வைத்திருக்கும் காராமணி இரண்டையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்துவிட்டு நாம் வறுத்து வைத்திருக்கும் அரிசி மாவை அதில் சிறிது சிறிதாக கொட்டி கரண்டியை வைத்து கட்டி விழாத அளவிற்கு நன்றாக கிண்ட வேண்டும். வெல்லக் கரைசல் முற்றிலும் வற்றி அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வரும் வரை நன்றாக கலந்து விட வேண்டும். இப்படி அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடி போட்டு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
– Advertisement –
10 நிமிடங்களுக்கு பிறகு கை பொறுக்கும் அளவிற்கு சூடு வந்ததும் கையில் நெய்யை தடவி நன்றாக மாவை பிணைந்து கொள்ளுங்கள். இப்பொழுது தட்டிலோ இலையிலோ நெய்யை தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதில் தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது இட்லி சட்டியை அடுப்பில் வைத்து அதில் நாம் தட்டி வைத்திருக்கும் அடையை இட்லியை வேக வைப்பது போல் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான காராமணி இனிப்பு அடை தயாராகி இருக்கும்.
இதையும் படிக்கலாமே:>பீர்க்கங்காய் கொள்ளு துவையல் செய்முறை
பெண்களுக்கு மிகவும் உகந்த விரதமாக கருதப்படக்கூடிய காரடையான் நோன்பு விரத நாள் அன்று இந்த முறையில் நாம் இனிப்பு அடை செய்து வைத்து அம்பாளை வழிபட அம்பாளின் அருளால் தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam