கோவில் புளியோதரை | Kovil puliyotharai

கோவில் புளியோதரை | Kovil puliyotharai

Qries

– Advertisement –

கோவிலில் கொடுக்கும் புளியோதரை அடடா.. என்று சப்பு கொட்டி சாப்பிடும் அளவிற்கு ருசியாக இருக்கும். பக்தர்களுக்கு ருசியாக செய்து கொடுக்கும் அர்ச்சகர்கள் சொல்லும் ரகசியத்தை தான் இப்பொழுது சொல்லப் போகிறோம். மணக்க மணக்க கோவிலில் கொடுக்கும் புளியோதரை போலவே எளிதாக நம் வீட்டில் செய்வது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் அறிந்து கொள்ளப் போகிறோம்.
கோவில் புளியோதரை பொடி ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு – ஒரு டம்ளர் (50 கிராம்)உளுத்தம் பருப்பு – முக்கால் டம்ளர்மல்லி விதைகள் – இரண்டு டீஸ்பூன்வெள்ளை எள்ளு – இரண்டு டேபிள் ஸ்பூன்மிளகு – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்வெந்தயம் – ஒரு டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கைப்பிடிகல் உப்பு – ஒரு டீஸ்பூன்நல்லெண்ணெய் – இரண்டு டீஸ்பூன்வரமிளகாய் – 12புளி – 2 எலுமிச்சை பழ அளவுபெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
– Advertisement –

புளியோதரை பொடி அரைக்கும் முறை :
முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடிகனமான வாணலி ஒன்றை அடுப்பில் வையுங்கள். குறைந்த தீயில் வைத்துக் கொண்டு முதலில் கடலை பருப்பை போட்டு லேசாக சூடு வர வறுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு பெரிய தட்டில் போடுங்கள். பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் தனியா விதைகளை சேர்த்து வறுக்க வேண்டும். வெள்ளை எள்ளு அல்லது கருப்பு எள்ளு எது வேண்டுமானாலும் போடலாம். அடுத்ததாக இதை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சீரகம், மிளகு, வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து லேசாக வறுத்து தட்டில் போடுங்கள். ஒரு டீஸ்பூன் அளவிற்கு கல் உப்பை சேர்த்து அதையும் 10 செகண்ட் லேசாக வறுத்து போட்டுக் கொள்ளுங்கள்.
– Advertisement –

ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சை பிரஷ்ஷான கருவேப்பிலை இலைகளை போட்டு சூடேற வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நீட்டு வர மிளகாய்களை காம்புடன் எடுத்து போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். மிளகாய்களை எடுத்த பின்பு மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கொட்டைகள், நார்கள் எல்லாம் நீக்கிய புளியை கொஞ்சம் கொஞ்சம் துண்டுகளாக போட்டு வறுக்க வேண்டும்.
ஒவ்வொரு பொருட்களையும் கருகி விடாமல் லேசாக வறுக்க வேண்டும் நினைவில் கொள்ளுங்கள். பின்னர் இவையெல்லாம் ஆறியதும் பெரிய மிக்சர் ஜாரில் சேர்த்து இவற்றுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி தான் புளியோதரை செய்ய பயன்படும் ரெடிமேட் பொடி! பின்னர் இதை வைத்து எப்படி புளியோதரை சாதம் தயார் செய்வது? என்பதை பார்ப்போம்.
இதையும் படிக்கலாமே:வாராஹி எலுமிச்சை பரிகாரம்
புளி சாதம் செய்முறை விளக்கம் :
முதலில் அடுப்பில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, இரண்டு டேபிள்ஸ்பூன் தோல் உரித்து வைத்துள்ள வேர்க்கடலைகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை, 2 வரமிளகாய்களை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்துடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நீங்கள் தயார் செய்து வைத்துள்ள புளியோதரை பொடி தேவையான அளவிற்கு தூவி ஒரு பிரட்டு பிரட்டினால் கோவிலில் கொடுக்கும் புளியோதரை தயார்! ஒரு மணி நேரம் ஊற வைத்து சாப்பிடுங்கள், ருசி அபாரமாக இருக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top