
நம்மில் பலரும் வடை பிரியர்களாகவே இருப்போம். வடை சுடும் வாசனை வந்தாலேயே அதை சாப்பிட வேண்டும் என்று நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வடை பலவிதமான பொருட்களை பயன்படுத்தி வடை செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கும். அதே முறையில் தான் பச்சை பயிரை வைத்து வடை செய்ய முடியும். வடை பிரியர்களுக்கு எப்பொழுதும் போல் உழுந்து வடையை சாப்பிடாமல் சற்று அதைவிட சுவை வித்தியாசமான சுவையில் அதே சமயம் ஆரோக்கியமாக பச்சைப் பயிரை வைத்து வடை செய்யும் முறையைப் பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.தேவையான பொருட்கள்பச்சைப்பயிறு – ஒரு கப்அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்உப்பு – தேவையான அளவுசீரகம் – அரை டீஸ்பூன்மிளகு – ஒரு டீஸ்பூன்,வெங்காயம் – ஒன்றுபச்சை மிளகாய் – ஒன்றுஇஞ்சி – சிறிய துண்டுகொத்தமல்லி – சிறிதளவுகருவேப்பிலை – சிறிதளவுபேக்கிங் சோடா – 2 சிட்டிகைஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு – Advertisement -செய்முறைமுதலில் பச்சைப் பயிரை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி நல்ல தண்ணீர் ஊற்றி ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பச்சைப்பயிறு நன்றாக ஊறி இருக்க வேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் தண்ணீர் இல்லாமல் பயரை மட்டும் போட்டு நைசாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.இப்பொழுது அந்த மாவை கைகளினால் நன்றாக அடித்து கலக்க வேண்டும். அப்படி கலக்கும் பொழுது மாவு பொங்கி வருவது போல் தோன்றும். சரியான வடை மாவு பதம் வர வேண்டும். அந்த மாவை எடுத்து தண்ணீரில் போட்டால் தண்ணீரில் மிதக்க வேண்டும். அந்த அளவிற்கு நாம் மாவை அடித்து பிணைய வேண்டும். அந்த மாவு வடை மாவு பதம் வந்த பிறகு அதில் அரிசி மாவு, உப்பு, சீரகம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகை ஒன்று இரண்டாக இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். – Advertisement – வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும், இஞ்சியையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலையை சிறிது சிறிதாக கிள்ளி அதில் போட்டுக் கொள்ளுங்கள். கடைசியாக இதனுடன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து நன்றாக கலந்தால் பச்சை பயிறு வடை மாவு தயாராகிவிட்டது.இப்பொழுது இந்த வடையை பொறிப்பதற்கு அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் வைத்துக் கொண்டு மெதுவடை எப்படி தட்டி எண்ணெயில் போடுவோமோ அதே போல் இந்த மாவையும் எடுத்து தட்டி எண்ணெயில் போட வேண்டும். ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு மறுப்புறம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும் சுவையான மொறுமொறு பச்சைப் பயிறு மெதுவடை தயாராகிவிட்டது.இதையும் படிக்கலாமே:கம்பு ஆப்பம் செய்யும் முறைஎப்பொழுதும் போல் உளுந்தை வைத்து மெதுவடை செய்யாமல் அவ்வப்பொழுது பச்சைப் பயிரையும் வைத்து மெதுவடை செய்து கொடுத்துப் பாருங்கள். இதன் சுவையில் மெய்மறந்து போவார்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam