
நமக்கு கிடைக்கக் கூடிய காய்கறிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. அந்த சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்த சத்துக்களை பெற முடியும். அந்த வகையில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் ஒன்றாக திகழ்வதுதான் சுரக்காய். பலரும் சுரைக்காயை வைத்து கூட்டு, பொரியல் என்று செய்வார்கள். இப்படி செய்தாலும் ஒரு சிலர் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படி சாப்பிடாதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு சட்னியாக தான் சுரக்காய் சட்னி திகழ்கிறது. இந்த சுரக்காய் சட்னியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்சுரக்காய் நறுக்கியது – ஒரு கப்வெங்காயம் – ஒன்றுதக்காளி -3எண்ணெய் – 3 ஸ்பூன்பச்சை மிளகாய் – 2உப்பு – தேவையான அளவுமிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்சாம்பார் தூள் – ஒரு டீஸ்பூன்தண்ணீர் – 1/2 டம்ளர்கொத்தமல்லி – சிறிதளவுநாட்டுச்சக்கரை – 1/4 ஸ்பூன்கடுகு – ஒரு ஸ்பூன்உளுந்து – ஒரு ஸ்பூன்பெருங்காயத்தூள் – சிறிதளவுகருவேப்பிலை – ஒரு கொத்து – Advertisement -செய்முறைமுதலில் சுரக்காய், தக்காளி, வெங்காயம் இவை மூன்றையும் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு குக்கரை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, சுரக்காய் இவை அனைத்தையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு இதற்கு தேவையான அளவு உப்பை சேர்த்துவிட்டு மிளகாய் தூள், சாம்பார் தூளையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு நான்கு விசில் விட வேண்டும்.விசில் முற்றிலும் நீங்கிய பிறகு குக்கரின் மூடியை திறக்க வேண்டும். இப்பொழுது இந்த சுரக்காய் விழுதில் தண்ணீர் இருக்கும். அந்த தண்ணீரை தனியாக இருத்து விட்டு மீதம் இருக்கக்கூடிய சுரக்காய் வெங்காயம் தக்காளி அனைத்தையும் மத்தை பயன்படுத்தி கடைந்து விட வேண்டும். கடைய தெரியாது என்பவர்கள் மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு முறை சுற்றினால் போதும். இதை நைசாக அரைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. – Advertisement – பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரையும் அதில் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள்கொள்ளுங்கள். கடைசியாக இதில் நாட்டுச்சர்க்கரை மற்றும் கொத்தமல்லி தலையை தூவ வேண்டும். அடுத்ததாக இதை தாளிப்பதற்கு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்தை போட வேண்டும். கடுகு வெடித்து உளுந்து சிவந்ததும் அதில் ஒரு கொத்து கருவேப்பிலையும் சிறிதளவு பெருங்காயத் தூளையும் போட்டு அவை அனைத்தும் பொறிந்ததும் சட்னியில் ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சுரக்காய் சட்னி தயாராகிவிட்டது.இதையும் படிக்கலாமே: கீரை பருப்பு கூட்டுஉடல் எடையை குறைக்கக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்றாக திகழக்கூடிய சுரைக்காயை இப்படி சட்னியாக செய்து தருவதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam