லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Qries

Lalitha Navarathna Malai Lyrics in Tamil
லலிதா நவரத்தின மாலை
ஒரு சமயம் அகத்தியருக்கு உபதேசங்கள் பலவும் செய்த ஹயக்ரீவர், லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையையும் அவருக்குச் சொன்னார். அதனைக் கேட்ட அகத்தியர், அந்தத் துதியினைச் சொல்லி, அம்பாளை வழிபட ஏற்ற தலம் எது என்பதையும் கூறிடுமாறு வேண்டினார்.
பூவுலகில் மனோன்மணி பீடத்தில் அம்பிகை லலிதையாக அருளும் திருமீயச்சூர் திருத்தலத்திற்குச் சென்று லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூறி வழிபடுமாறு சொன்னார், ஹயக்ரீவப் பெருமான். அதன்படி திருமீயச்சூர் தலம் வந்து அன்னையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஆராதித்தார், அகத்தியர். அப்போது லலிதா சகஸ்ரநாமம் முழுவதையும் சொல்வதன் பயனை, பாமர மக்களும் பெறவேண்டும் என்பதற்காக எளிமையான துதி ஒன்றை இயற்றினார்.
அகத்திய முனிவர் அருளிய ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை:
காப்பு
ஞான கேணசா சரணம் சரணம்ஞான ஸ்கந்தா சரணம் சரணம்ஞான சத்குரு சரணம் சரணம்ஞானானந்தா சரணம் சரணம்
ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம்பூக்கும் நகையாள் புவனேஷ்வரிபால்சேர்க்கும் நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயகவாரணமே
வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூடி நெடுங்கன வானதவம்பெற்றும் தெரியார் நினையென்னில் அவம்பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் பயிரப் படைவாள் வயிரப்பகைவர்க்கெமனாக எடுத்தவளேவற்றாத அருட் சுனையே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
நீலம்
மூலக் கனலே சரணம் சரணம்முடியா முதலே சரணம் சரணம்கோலக் கிளியே சரணம் சரணம்குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்வாலைக் குமரி வருவாய் வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
முத்து
முத்தே வரும்முத் தொழிலாற் றிடவேமுன்னின்று அருளும் முதல்வி சரணம்வித்தே விளைவே சரணம் சரணம்வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறியநான் தனயன் தாய் நீசாகாத வரம் தரவே வருவாய்மத்தேரு ததிக் கிணைவாழ்வடையேன்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பவளம்
அந்தி மயங்கிய வான விதானம்அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடைசிந்தை நிறம்பவளம் பொழி பாரோதேம் பொழிலாமிது செய்தவள் யாரோ
எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுந்தாள்மந்திர வேத மயப்பொருளானாள்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாணிக்கம்
காணக் கிடையாக் கதியானவளேகருதக் கிடையாப் கலையானவளேபூணக் கிடையாப் பொலிவானவளேபுதுமைக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும்நின் துதியும்நவிலாதவரை நாடா தவளேமாணிக்க ஒளிக் கதிரே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்மதுரித பதமே சரணம் சரணம்சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்ச்ருதி ஜதிலயமே இசையே சரணம்
அரஹர சிவஎன்றடியவர் குழுமஅவரருள் பெறஅருளமுதே சரணம்வரநவ நிதியே சரணம் சரணம்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
கோமேதகம்
பூமேவியநான் புரியும் செயல்கள்பொன்றாது பயன் குன்றா வரமும்தீமேல் இடினும் ஜெயசக்தி எனத்திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவேகுழல்வாய் மொழியே வருவாய் தருவாய்மாமேருவிலே வளர்கோ கிலமேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதுமராக விலாஸ வியாபினி அம்பசஞ்சல ரோக நிவாரணி வாணிசாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணிஅம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணிமஞ்சுள மேரு சிருங்க நிவாஸினிமாதா ஜெயஓம் லலிதாம்பிகையே
வைடூரியம்
வலையொத்தவினை கலையொத் தமனம்மருளப் பறையாறொலியொத் தவிதால்நிலையற் றெளியேன் முடியத் தகுமோநிகளம் துகளாக வரம் தருவாய்
அலைவற் றசைவாற்றனுபூதி பெரும்அடியார் முடிவாழ் வைடூரியமேமலையத் துவசன் மகளே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பலஸ்துதி
எவர்எத் தினமும் இசைவாய் லலிதாநவரத்தின மாலை நவின்றிடுவார்அவர்அற்புதசக்தி எல்லாம் அடைவார்சிவரத்தினமாய் திகழ்வாரவரே
Benefits of Lalitha Navarathna Malai in Tamil
லலிதா நவரத்தின மாலை பயன்கள்
லலிதா நவரத்னமாலை துதியை தினமும் சொல்பவர் எல்லா வளமும் நலமும் பெற்று சிவசக்தியரின் அருளால் சிறப்புகள் யாவும் பெறுவதோடு, ஒப்பற்ற நவரத்ன மணிபோன்ற பிரகாசமான வாழ்வையும் அடைவர் என்பது அகத்தியரே அளித்துள்ள வாக்கு.
பலன்தரும் அபூர்வமானதும் எளிமையானதுமான அந்தத் துதி உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது. தூயமனதோடு, துதியைச் சொல்லுங்கள். அன்னை லலிதா பரமேஸ்வரியின் அருளால், அனைத்து நலனும் உங்கள் வாழ்வில் வந்து சேரும். ஒவ்வொரு நாளும் குறையாத நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் கூடும். ஆரோக்யமும் ஆயுளும் நீடிக்கும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top