எந்தத் தீங்கும் உங்களை நெருங்காது இருக்க மந்திரம்

எந்தத் தீங்கும் உங்களை நெருங்காது இருக்க மந்திரம்

Qries

– Advertisement –

வீட்டில் உள்ளவர்களோ நாமோ வீட்டை விட்டு வெளியே சென்று மறுபடியும் நல்லபடியாக வீட்டிற்கு வருவதற்குள் எத்தனையோ வித மான பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம். அது பிறர் கொடுக்கும் தொல்லைகளாக இருக்கலாம் அல்லது வண்டி வாகனங்களில் செல்லும் போது விபத்தாக இருக்கலாம்.
வேறு சில பிரச்சனைகள் இப்படி என்னவாக இருந்தாலும் அனைத்தையும் இந்த ஒரு மந்திரம் சரி செய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
– Advertisement –

கெட்டது நடக்காமல் இருக்க மந்திரம்
எந்த ஒரு வழிப்பாடும் பூஜையும் நாம் எப்போதும் செய்வதோடு சேர்த்து அதற்கான மந்திர வார்த்தைகளை உபயோகப்படுத்தும் போது பலன் பல மடங்காக அதிகரிக்கும். மந்திரங்களுக்கு அத்தகைய சக்திகள் உண்டு. ஆகையால் தான் நம்முடைய வழிபாட்டு முறைகள் அனைத்திலும் மந்திரங்கள் பிரதானமானதாக சொல்லப்படுகிறது.
நம்முடைய வாழ்க்கையில் நாம் தினந்தினம் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் இன்னல்கள் இருந்து காக்க கூடிய எளிமையான ஒரு மந்திரத்தையும் அந்த மந்திரத்துடன் சேர்த்து செய்ய வேண்டிய அற்புதமான இந்த தாந்திரீக பரிகாரத்தையும் செய்ய வேண்டும். இதற்கு கொஞ்சமாக கையில் கடுகு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கடுகை உங்களுடைய வலது உள்ளங்கையில் வைத்து நன்றாக மூடிக் கொண்டு கையை உங்கள் நெஞ்சின் அருகே வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

ஓம் கிரீம் நம
என்ற இந்த மந்திர வார்த்தையை மூன்று முறை சொன்ன பிறகு அதை மடித்து ஒரு பேப்பரில் வைத்து உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த கடுகு எப்போதும் உங்களிடம் இருக்கும் போது உங்களுக்கு எந்த வித பிரச்சனைகளும் நெருங்காது என்று சொல்லப்படுகிறது. சாதாரண கடுகை மந்திர வார்த்தையின் மூலம் நாம் உருவேற்றி பயன்படுத்துவதால் நம்மை எந்த கெட்ட சக்திகளும் நெருங்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதை அமாவாசை அன்று செய்து பாக்கெட்டில் வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தினம் தினம் வெளியில் செல்லும் பொழுது இந்த மந்திர வார்த்தை மட்டும் சொல்லி விட்டு செல்லுங்கள். அடுத்த அமாவாசை அன்று இதை எடுத்து போட்டு விட்டு வேறு கடுகை இது போல மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:வீட்டிற்குள் நுழையும் போது பார்க்க வேண்டிய பொருட்கள்இந்தக் கடுகு உங்களிடம் இருப்பதினால் நோய் நொடிகள் அண்டாது, விபத்துக்கள் நேராது, எதிரிகள் தொல்லை இருக்காது, சமூகத்தில் நல்ல ஒரு அந்தஸ்தை பெறலாம், பண வரவு இருக்கும். இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித் தரக் கூடிய எளிமையான பரிகாரம் இது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top