நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

[gtranslate]
குழந்தை வரம் தரும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி

குழந்தை வரம் தரும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி


திருக்கருகாவூர் திருத்தலத்தில் எழுந்தருளி, கருவிலிருக்கும் குழந்தையைக் காத்து, மழலைச் செல்வம் வேண்டுவோருக்கு வரமளிக்கும் கருணைக் கடலாகத் திகழ்பவர் அன்னை ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை. “கருகாவூர்” என்ற பெயரிலேயே அன்னை கருவை எப்படிக் காக்கிறாள் என்பது பொதிந்துள்ளது. நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் எவ்வித இடையூறும் இன்றி சுகப்பிரசவம் அடைய விரும்புபவர்கள் தினமும் இந்த 108 போற்றியை துதிப்பது மகா சக்தியைக் கொடுக்கும். நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அன்னையை வணங்கி, உங்கள் குலம் தழைக்க அவளது திருவருளைப் பெற இப்பாடலை பாராயணம் செய்யுங்கள்.
1. ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி2. ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி3. ஓம் கருகாவூர் தேவியே போற்றி4. ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி5. ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி6. ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி7. ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி8. ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி9. ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
10. ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி11. ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி12. ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி13. ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி14. ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி15. ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி16. ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி17. ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி18. ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
19. ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி20. ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி21. ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி22. ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி23. ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி24. ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி25. ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி26. ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி27. ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
28. ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி29. ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி30. ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி31. ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி32. ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி33. ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி34. ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி35. ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி36. ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
37. ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி38. ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி39. ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி40. ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி41. ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி42. ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி43. ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி44. ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி45. ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி
46. ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி47. ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி48. ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி49. ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி50. ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி51. ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி52. ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி53. ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி54. ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
55. ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி56. ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி57. ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி58. ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி59. ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி60. ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி61. ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி62. ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி63. ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
64. ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி65. ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி66. ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி67. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி68. ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி69. ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி70. ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி71. ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி72. ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
73. ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி74. ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி75. ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி76. ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி77. ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி78. ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி79. ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி80. ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி81. ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
82. ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி83. ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி84. ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி85. ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி86. ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி87. ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி88. ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி89. ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி90. ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி
91. ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி92. ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி93. ஓம் சக்தியின் வடிவமே போற்றி94. ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி95. ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி96. ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி97. ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி98. ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி99. ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
100. ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி101. ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி102. ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி103. ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி104. ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி105. ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி106. ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி107. ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி108. ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி…
பெண்களின் வாழ்வை முழுமைப்படுத்தும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை, ஒரு தாயைப் போலவே தன் பக்தர்களை அரவணைப்பவள். உங்கள் வீட்டில் விளக்கேற்றி, அன்னையின் படத்தின் முன் அமர்ந்து மனமுருகி இந்த 108 போற்றிகளைச் சொல்லி வரும்போது, தடைகள் நீங்கி நற்செய்திகள் உங்களைத் தேடி வரும். குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும் சகோதரிகள் இந்த போற்றியை தினமும் சொல்லி வர, அன்னை தனது இடக்கரத்தில் கருவைத் தாங்கி காப்பதாக ஐதீகம்.
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து, அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் அருளை அனைவரும் பெற வழிவகை செய்யுங்கள்.
ஓம் கர்ப்பரட்சாம்பிகாயை நமஹ!

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top