
நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நமக்கு நன்மைகளும் தீமைகளும் உண்டாகின்றன. நன்மைகள் உண்டாகும் பொழுது அதனால் நல்லவிதமான பலன்களை அனுபவிப்போம். தீமைகள் உண்டாகும் பொழுது அதனால் தீய பலன்களை அனுபவித்து வாழ்க்கையில் படாத பாடுபடுவோம். அப்படிப்பட்ட தீமைகள் முற்றிலும் நம்மை விட்டு விலக வேண்டும் என்று நினைப்பவர்கள் கணபதியின் இந்த ஒரு மந்திரத்தை கூறினால் போதும். இந்த மந்திரத்தை எப்படி கூறுவது என்று தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.மோதக கணபதி வழிபாடுவிநாயகப் பெருமானுக்கு பலவிதமான பெயர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பெயர்களுக்கும் ஒவ்வொரு விதமான காரணங்களும் இருக்கிறது.. அந்த காரணங்களை உணர்ந்து அந்த பெயருக்குரிய விநாயகரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாக்கும். அந்த வகையில் இருக்கக்கூடிய ஒரு விநாயகர் தான் மோதக கணபதி. மோதகம் என்றால் அது விநாயகரின் கையில் இருக்கக்கூடிய பூரண கொழுக்கட்டியை குறிக்கிறது. பூரண கொழுக்கட்டையில் எப்படி பச்சரிசி, வெல்லம், பருப்பு, ஏலக்காய், சுக்கு போன்ற அனைத்தும் இருக்கிறதோ அதேபோல் நம்முடைய வாழ்க்கையிலும் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்பட்டு இனிமையான வாழ்க்கையை வாழ்வதற்கு அருள் புரிபவராக தான் மோதக கணபதி திகழ்கிறார். – Advertisement -அப்படிப்பட்ட மோதக கணபதியின் மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் நாம் கூறுவதன் மூலம் நம் வாழ்வில் இதுவரை நாம் அனுபவித்த அனைத்து விதமான கஷ்டங்களும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தீமைகளும் முற்றிலும் விலகும். மோதகத்தைப் போல இனிமையான சுகமான வாழ்க்கையை வாழ முடியும்.இந்த மந்திரத்தை கடற்கரையில் அமர்ந்து கொண்டு தான் கூற வேண்டும். ஒருவேளை அருகில் கடற்கரை இல்லை என்பவர்கள் ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டும் கூறலாம். எந்த நாளில் கூற வேண்டும் என்று எதுவும் கிடையாது. உங்களுக்கு எப்போதெல்லாம் கடற்கரைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறதோ அல்லது ஆற்றங்கரைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் சூரியன் அஸ்தமனம் ஆன பிறகோ அல்லது உதயமாவதற்கு முன்பாகவோ தான் இந்த மந்திரத்தை நாம் கூற வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். – Advertisement – சூரியன் உதயமாவதற்கு முன்பாக இருக்கக்கூடிய பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூறலாம் அல்லது சூரியன் அஸ்தமனமான பிறகு இரவு நேரத்திலும் இந்த மந்திரத்தை நாம் கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக இடுப்பில் ஒரு ஈரத்துணியை கட்டிக்கொண்டு கடற்கரை கரையோரம் அமர்ந்து கண்களை மூடி முதுகுத்தண்டை நேராக வைத்துக் கொண்டு மோதக கணபதியின் இந்த மந்திரத்தை 54 முறை கூற வேண்டும். வேறு எதுவும் செய்ய வேண்டாம். எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் கணபதியை மட்டும் முழுமையாக நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.மோதக கணபதி மந்திரம்“ஓம் மம் மகாகணபதயே ஏக தந்தாய ஹேரம்பாய மோதக ஹஸ்தாய ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனமே வசமானாய ஸ்வாஹா”இதையும் படிக்கலாமே:கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்விநாயகப் பெருமானை முழுமனதோடு நினைத்து இந்த மந்திரத்தை 54 முறை கூறுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தீமைகள் அனைத்தும் விலகும் நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam