பங்குனி சங்கடஹர சதுர்த்தி நாளன்று கூற வேண்டிய விநாயகர் மந்திரம்

Qries





– Advertisement –

பங்குனி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி என்பது இன்று மாலை 6:38 மணிக்கு ஆரம்பித்து நாளை இரவு 8:38 மணி வரை இருக்கிறது. இரவு சங்கடஹர சதுர்த்தி என்றால் அது இன்று தான். அதனால் இன்று இரவு ஒரு மணிக்குள் விநாயகப் பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறி வழிபாடு செய்பவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் கேட்டது அனைத்தும் கிடைக்கும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பங்குனி சங்கடஹர சதுர்த்தி மந்திரம்
விநாயகப் பெருமானுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. விநாயகப் பெருமானின் திருநாமங்களும் பல இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டாகும் என்று நம் அனைவருக்குமே தெரியும். சாதாரணமான வழிபாட்டை விட மந்திர வழிபாடு என்பது சக்தி வாய்ந்ததாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த வழிபாட்டை இன்று இரவு ஒரு மணிக்குள் நாம் செய்து விட்டோம் என்றால் விநாயகப் பெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.
– Advertisement –

இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். அதாவது அலுவலகத்தில் இருப்பவர்கள், பயணங்களில் இருப்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள், கோவிலில் இருப்பவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். பூஜை அறையில் இருந்து தான் கூற வேண்டும் என்று இல்லை.
உங்களுடைய நீண்ட நாள் வேண்டுதல் எதுவோ அந்த வேண்டுதலை முழுமனதோடு விநாயகப் பெருமானை மனதார நினைத்து ஒரு முறை கூறிவிட்டு இந்த மந்திரத்தை கூறினால் போதும். இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 10 நிமிடத்தில் இருந்து 20 நிமிடம் வரை கூறலாம். நிறுத்தி நிதானத்துடன் பொறுமையுடன் கூற வேண்டும். ஒவ்வொரு முறை இந்த மந்திரத்தை கூறும்பொழுதும் விநாயகப் பெருமானை மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி நாம் நிறுத்தி நிதானத்துடன் விநாயகப் பெருமானை மனதார நினைத்துக் கொண்டு இந்த ஒரு மந்திரத்தை கூறும் பொழுது நம்முடைய நீண்ட நாள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு விநாயகப் பெருமான் அருள்வார்.
– Advertisement –

மந்திரம்
“ஓம் கபிலாய நமஹ”
இதையும் படிக்கலாமே: தங்கம் அதிகளவில் சேர மந்திரம்
மிகவும் எளிமையான இந்த விநாயகரின் திருநாமத்தை முழு மனதோடு விநாயகப் பெருமானை நினைத்துக் கொண்டு இன்று இரவு ஒரு மணிக்குள் கூறுபவர்களுக்கு அவர்களுடைய நீண்ட நாள் வேண்டுதல்கள் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –








Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top