பாயிரம் & முதல் தந்திரம் பாடல்கள்

பாயிரம் & முதல் தந்திரம் பாடல்கள்


திருமூல நாயனாரால் அருளப்பட்ட திருமந்திரம் சைவ சமயத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகும். திருமந்திரம் தமிழ்ச் சைவ சித்தாந்தத்தின் முதன்மையான நூல்களில் ஒன்றாகவும், யோகா மற்றும் தத்துவத்தின் அற்புதமான களஞ்சியமாகவும் விளங்குகிறது. சைவத்தின் ஆழமான தத்துவங்களை, யோக நெறிகளை, உடல்-உயிர்-ஆன்மா இணைப்பை எளிய தமிழ்ப் பாடல்களில் விளக்கும் இந்நூல், திருமுறையின் பத்தாவது தொகுப்பாக இடம்பெற்றுள்ளது.
விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
பாயிரம்
1. கடவுள் வாழ்த்து
1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.
2. போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனைநாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனைமேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
3. ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்பக்கநின் றார்அறி யாத பரமனைப்புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே.
4. அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்பகலிடத் தும்இர வும்பணிந் தேத்திஇகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
5. சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லைஅவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லைபுவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்தவனச் சடைமுடித் தாமரை யானே.
6. அவனை ஒழிய அமரரும் இல்லைஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவனன்றி மூவரால் ஆவதொன் றில்லைஅவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.
7. முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.
8. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்ஆயினும் ஈசன் அருளறி வாரில்லைசேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்திஎன்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
10. தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்தானே தடவரை தண்கட லாமே.
11. அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லைமுயலும் முயலில் முடிவும் மற் றாங்கேபெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.
12. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே.
13. மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனைவிண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லைகண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
14. கடந்துநினின் றான்கம லம்மல ராதிகடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.
15. ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்றவேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்நீதியு மாய்நித்த மாகிநின் றானே.
16. கோது குலாவிய கொன்றைக் குழற்சடைமாது குலாவிய வாள்நுதல் பாகனையாது குலாவி அமரரும் தேவரும்கோது குலாவிக் குணம்பயில் வாரே.
17. காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழிதேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.
18. அதிபதி செய்து அளகை வேந்தனைநிதிபதி செய்த நிறைதவம் நோக்கிஅதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.
19. இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்முதுபதி செய்தவன் மூதறி வாளன்விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கிஅதுபதி யாக அமருகின் றானே.
20. முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தஅடிகள் உறையும் அறனெறி நாடில்இடியும் முழக்கமும் ஈசர் உருவம்கடிமலர்க் குன்ற மலையது தானே.
21. வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்கானக் களிறு கதறப் பிளந்தனம்கோனைப் புகழுமின் கூடலு மாமே.
22. மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.
23. வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனைஇல்லென வேண்டா இறையவர் தம்முதல்அல்லும் பகலும் அருளுகின் றானே.
24. போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடிதேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையைமாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.
25. பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
26. தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்கடந்துநின் றாம்கம லம்மலர் மேலேஉடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே.
27. சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்துஅந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்றுநந்தியை நாளும் வணங்கப் படும்அவர்புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.
28. இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்உணங்கிநின் றான்அம ராபதி நாதன்வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.
29. காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்கோணநில் லாத குணத்தடி யார்மனத்துஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.
30. வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார்ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியைநான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.
31. மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கேகண்ணகத் தேநின்று காதலித் தேனே.
32. தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்மேவு பிரான்விரி நீருலகேழையும்தாவு பிரான்தன்மை தானறி வாரில்லைபாவு பிரான்அருட் பாடலு மாமே.
33. பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.
34. சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறிஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.
35. ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடுமாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே.
36. அப்பனை நந்தியை ஆரா அமுதினைஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனைஎப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்அப்பரி சீசன் அருள்பெற லாமே.
37. நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்துஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
38. பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே.
39. வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனைஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே.
40. குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.
41. சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கேஇனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.
42. போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவதுநாயக னான்முடி செய்தது வேநல்கும்மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே.
43. அரனடி சொல்லி அரற்றி அழுதுபரனடி நாடியே பாவிப்ப நாளும்உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்குநிரன்அடி செய்து நிறைந்துநின் றானே.
44. போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடிபோற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடிபோற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடிபோற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.
45. விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லைதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்பதிவழி காட்டும் பகலவ னாமே.
46. அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்றுசிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழமுந்திவண் ணாமுதல் வாபர னேஎன்றுபுந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே.
47. மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்பனையுள் இருந்த பருந்தது போலநினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே.
48. அடியார் பரவும் அமரர் பிரானைமுடியால் வணங்கி முதல்வனை முன்னிப்படியால் அருளும் பரம்பரன் எந்தைவிடியா விளக்கென்று மேவிநின் றேனே.
49. நரைபசு பாசத்து நாதனை உள்ளிஉரைபசு பாசததுஒருங்கவல் லார்க்குத்திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்கரைபசு பாசம் கடநது எய்த லாமே.
50. சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்றுபாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்றுநாடுவன் நான்இன் றறிவது தானே.

2. வேதச் சிறப்பு
51. வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்கவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்றவேதத்தை ஓதியே வீடுபெற் றார்க்களே.
52. வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்வேதம் உரைத்தானும் வேதா விளங்கிடவேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.
53. இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளேஉருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கிவெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.
54. திருநெறி யாவது சித்தசித் தன்றிப்பெருநெறி யாய பிரானை நினைந்துகுருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
55. ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லைவேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.
56. பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே.

3. ஆகமச் சிறப்பு
57. அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
58. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
59. பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்கண்டவர் கூறும் கருத்தறி வார்என்கபண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.
60. அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிதெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
61. பரனாய் பராபரம் காட்டி உலகில்தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்திஉரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.
62. சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்உவமா மகேசர் உருத்திர தேவர்தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்றநவஆ கமமெங்கள் நந்திபெற் றானே.
63. பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே.
64. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.
65. மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்றுஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்துஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
66. அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்உணர்த்தும் அவனை உணரலு மாமே.

4. குரு பாரம்பரியம்
67. நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்என்றிவர் என்னோ டெண்மரு மாமே.
68. நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்நந்தி அருளாலே மூலனை நாடினோம்நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.
69. மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடுஇந்த எழுவரும் என்வழி யாமே.
70. நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டுநால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகெனநால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.
71. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்கழிந்த பெருமையைக் காட்டகி லானே.
72. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடேஅழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.

5. திருமூலர் வரலாறு
73. நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டுபுந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.
74. செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே.
75. இருந்தஅக் காரணம் கேள்இந் திரனேபொருந்திய செல்வப் புவனா பதியாம்அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.
76. சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்மிதாசனி யாதிருந் தேன்இன்ற காலம்இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கிஉதாசனி யாதுடனே உணர்ந் தோமால்.
77. மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்நீலாங்க மேனியள் நேரிழை  யாளொடுமூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.
78. நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறைசீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.
79. சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறைசேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.
80. இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடிஇருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தேஇருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தேஇருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.
81. பின்னைநின்று என்னே பிறவி பெறுவதுமுன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்என்னைநன் றாக இறைவன் படைத்தனன்தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.
82. ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்குஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்துநானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
83. செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்வெல்கின்ற ஞானத்து மிக்கேள் முனிவராய்ப்பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்ஒல்கின்ற வான்வழி யூடுவந் தானே.
84. சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்உத்தம மாகவே ஓதிய வேதத்தின்ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்திஅத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.
85. யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
86. பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பிமறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலைஉறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே.
87. அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.
88. அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடிஅடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்லமுடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.
89. பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்றதற்பரன் கற்பனை யாகும் சராசரத்துஅற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்நற்பத முமளித் தானெங்கள் நந்தியே.
90. நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினைமாயத்தை மாமாயை தன்னில் வரும்பரைஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசரவீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.
91. விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதிஅளப்பில் பெருமையன் ஆனந்த நந்திதுளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்துவளப்பில் கயிலை வழியில்வந் தேனே.
92. நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன்நந்தி அருளாலே நானிருந் தேனே.
93. இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடிஅருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்அருக்கனும் சோமனும் ஆரழல் வீசஉருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.
94. பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னைஇயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானைஇயற்றிகழ் சோதி இறைவனு மாமே.

6. அவையடக்கம்
95. ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையையாரறி வார்இந்த அகலமும் நீளமும்பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்வேரறி யாமை விளம்புகின் றேனே.
96. பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்தேடவல் லார்நெறி தேடகில் லேனே.
97. மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்பின்னை உலகம் படைத்த பிரமனும்உன்னும் அவனை உணரலு மாமே.
98. தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரைமுத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்இத்துடன் வேறா இருந்து துதிசெயும்பத்திமை யால் இப் பயனறி யாரே.

7. திருமந்திரத் தொகைச் சிறப்பு
99. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்ஞாலம் அறியவே நந்தி அருளதுகாலை எழுந்து கருத்தறிந் தோதிடின்ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.
100. வைத்த பரிசே வகைவகை நன்னூலின்முத்தி முடிவிது மூவா யிரத்திலேபுத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொதுவைத்த சிறப்புத் தருமிவை தானே.

8. குரு மட வரலாறு
101. வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரைதந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.
102. கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்புலங்கொள் பரமானந் தர்போக தேவர்நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே.

9. திரு மும்மூர்த்திகளின் முறைமை
103. அளவில் இளமையும் அந்தமும் ஈறும்அளவியல் காலமும் நாலும் உணரில்தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்அளவில் பெருமை அரியயற் காமே.
104. ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.
105. ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனதுஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.
106. சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்தஅவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.
107. பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்அயனொடு மால்நமககு அன்னியம் இல்லைநயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே.
108. ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழமாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே.
109. வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லதுதானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லைஊனமர்ந் தோரை உணர்வது தானே.
110. சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்றஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்றுபேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.
111. பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகிவரத்தினுள் மாயவ னாய்அய னாகித்தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.
112. தானொரு கூறு சதாசிவன் எம்மிறைவானொரு கூறு மருவியும் அங்குளான்கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்றதானொரு கூறு சலமய னாமே.
பாயிரம் முற்றிற்று

முதல் தந்திரம்
1. உபதேசம்
113. விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டுதண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்துஉண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
114. களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்திகளிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்களிம்பணு காத கதிரொளி காட்டிப்பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
115. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்பதியினைப் போற்பசு பாசம் அனாதிபதியினைச் சென்றணு காப்பசு பாசம்பதியணு கிற்பசு பாசம் நில் லாவே.
116. வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்திதாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.
117. சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவேசூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடாசூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
118. மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்தலங்கள்ஐந் தானற் சதாசிவ மானபுலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்திநலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.
119. அறிவுஐம் புலனுட னேநான் றதாகிநெறியறி யாதுற்ற நீர்ஆழம் போலஅறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்குறியறி விப்பான் குருபர னாமே.
120. ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்தீமேவு பல்கர ணங்களுள் உற்றனதாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.
121. வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்சுத்தத் துரியம் பிறந்து துடக்கறஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடுசெத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.
122. சிவயோக மாவது சித்தசித் தென்றுதவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்அவயோகஞ் சாராது அவன்பதி போகநவயோக நந்தி நமக்களித் தானே.
123. அளித்தான் உலகெங்கும் தானான உண்மைஅளித்தான் அமரர் அறியா உலகம்அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.
124. வெளியில் வெளிபோய் விரவிய வாறும்அளியில் அளிபோய் அடங்கிய வாறும்ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.
125. சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்நித்தர் நிமலர் நிராமயர் நீள்பரமுத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.
126. முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்துஅப்பரி சாக அமர்ந்திருந் தாரே.
127. இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகிஇருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கிஇருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்குஇருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.
128. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலேசோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலேசோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே.
129. தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளேதூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளேதூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளேதூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
130. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லைஅவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே.
131. மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.
132. பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறிபெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறுபெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
133. பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கிஇருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே.
134. புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
135. சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோசுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.
136. அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுருஅப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.
137. அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்குஇடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோகடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்திடம்பெற நின்றான் திருவடி தானே.
138. திருவடி யேசிவ மாவது தேரில்திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்திருவடி யேசெல் கதியது செப்பில்திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
139. தெளிவு குருவின் திருமேனி காண்டல்தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
140. தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.
141. சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணைசிந்திப் பதுநந்தி செய்ய திருமேனிவந்திப் பதுநந்தி நாமம்இன் வாய்மையால்புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே.
142. போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்நாதன் நடத்தால் நயனங் களிகூரவேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

2. யாக்கை நிலையாமை
143. மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்ததுவிண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
144. பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்கொண்ட விரதமும் ஞானமும் அல்லதுமண்டி அவருடன் வழிநட வாதே.
145. ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்பேரினை  நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டுநீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
146. காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுளபாலுள் பருங்கழி முப்பத் திரண்டுளமேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்போலுயிர் மீளப் புக அறி யாதே.
147. சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்றஆக்கை பிரிந்தது அலகு பழுத்ததுமூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்காக்கைக் குப்பலி காட்டிய வாறே.
148. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
149. மன்றத்தே நம்பி மாடம் எடுத்ததுமன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.
150. வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதிநேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னைஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.
151. கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சறநெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவேமெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.
152. பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்றஒன்பது வாசலும் ஒக்க அடைத்தனதுன்புறு காலந் துரிசுவர மேன்மேல்அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.
153. நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறைநாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்டநாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
154. முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
155. மதுவூர் குழலியும் மாடும் மனையும்இதுவூர் ஒழிய இதணம் தேறிப்பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கிமதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.
156. வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்அச்சக லாதென நாடும் அரும்பொருள்பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.
157. ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டிநீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.
158. வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.
159. ஐந்து தலைப்பறி ஆறு சடையுளசந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்துவெந்து கிடந்தது மேலறி யோமே.
160. அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.
161. மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லைகாலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டுஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமைவேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.
162. கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லைஆடும் இலையமும் அற்றது அறுதலும்பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே.
163. முட்டை பிறந்தது முந்_று நாளினில்இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில்கெட்டது எழுபதில் கேடறி யீரே.
164. இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
165. மடல்விரி கொன்றையன் மாயன் படைத்தஉடலும் உயிரும் உருவந் தொழாமல்இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே.
166. குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டுஇடையும்அக் காலம் இருந்தது நடுவேபுடையு மனிதனார் போக்கும்அப் போதேஅடையும் இடம்வலம் ஆருயி ராமே.
167. காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே.

3. செல்வம் நிலையாமை
168. அருளும் அரசனும் ஆனையம் தேரும்பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்மருளும் பினையவன் மாதவ மன்றே.
169. இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டாமயக்கற நாடுமின் வானவர் கோனைப்பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.
170. தன்னது சாயை தனக்குத வாதுகண்டுஎன்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்ததுகண்ணது காணொளி கண்டுகொ ளீரே.
171. ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
172. தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதேமாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.
173. மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனேகவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.
174. வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள்மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்கூவும் துணையொன்று கூடலு மாமே.
175. வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலைபூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பதுநாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.
176. உடம்போடு உயிரிடை விட்டோ டும் போதுஅடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.

4. இளமை நிலையாமை
177. கிழக்கெழுந்த் தோடிய ஞாயிறு மேற்கேவிழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.
178. ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லைநீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்தூண்டு விளக்கின் சுடரறி யாரே.
179. தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறைஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியைஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே.
180. விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே.
181. பாலன் இளையன் விருத்தன் எனநின்றகாலங் கழிவன கண்டும் அறிகிலார்ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடிமேலுங் கிடந்து விரும்புவன் நானே.
182. காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்மாலை படுவதும் வாணாள் கழிவதும்சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே.
183. பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.
184. கண்ணதும் காய்கதி ரோனும் உலகினைஉண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.
185. ஒன்றிய ஈரெண் கலையும் உடனுறநின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.
186. எய்திய நாளில் இளமை கழியாமைஎய்திய நாளில் இசையினால் ஏத்துமின்எய்திய நாளில் எறிவ து அறியாமல்எய்திய நாளில் இருந்துகண் டேனே.

5. உயிர் நிலையாமை
187. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.
188. ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்ததுஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.
189. மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுளஅத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால்மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
190. வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனைவேங்கடத் துள்ளே விளையாடு நந்தியைவேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.
191. சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.
192. மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகைபீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலைகூறும் கருமயிர் வெண்மயி ராவதுஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.
193. துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசிஅடுப்பிடு மூன்றிற்கும்அஞ்செரி   கொள்ளிஅடுத்தெரி  யாமற் கொடுமின் அரிசிவிடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.
194. இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்உண்பது வாச மதுபோல் உயிர்நிலைஇன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளிகண்புற நின்ற கருத்துள்நில் லானே.
195. ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.
196. அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின்செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொருதவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே.

6. கொல்லாமை
197. பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.
198. கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களைவல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடைநில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

7. புலால் மறுத்தல்
199. பொல்லாப் புலாலை நுகரும் புலையரைஎல்லாரும் காண இயமன்றன் தூதுவர்செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே.
200. கொலையே களவுகள் காமம் பொய்கூறல்மலைவான பாதகமாம் அவை நீக்கித்தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்குஇலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.

8. பிறன்மனை நயவாமை
201. ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவேகாத்த மனையாளைக் காமுறுங் காளையர்காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.
202. திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியைஅருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்கருத்தறி யாதவர் காலற்ற வாறே.
203. பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

9. மகளிர் இழிவு
204. இலைநல வாயினும் எட்டி பழுத்தால்குலைநல வாங்கனி கொண்டுண லாகாமுலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.
205.மனைபுகு வார்கள் மனைவியை நாடில்சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்கனவது போலக் கசிந்தெழும் இன்பம்நனவது போலவும் நாடவொண் ணாதே.
206. இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.
207. வையகத் தேமட வாரொடும் கூடியென்மெய்யகத் தோடும் வைத்த விதியதுகையகத் தேகரும் பாலையின் சாறுகொள்மெய்யகத் தேபெரு வேம்பது வாமே.
208. கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.

10.நல்குரவு
209. புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கைஅடையப்பட் டார்களும் அன்பில ராயினார்கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லைநடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.
210. பொய்க்குழி தூர்ப்பான் புலரி  புலருதென்றுறக்குழி  தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.
211. கற்குழி தூரக் கனகமும் தேடுவர்அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியதுஅக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.
212. தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீயகடந்தோர் ஆவி கழிவதன் முன்னேஉடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே.
213. அறுத்தன ஆறினும் ஆனினம் மேவிஅறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வைவெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.

11. அக்கினி காரியம்
214. வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்திசையும் திசைபெறு தேவர் குழாமும்விசையும் பெருகிய வேத முதலாம்அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
215. ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறிதாமறி வாலே தலைப்பட்ட வாறே.
216. அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கிஅணைதுணை வைத்ததின் உட்பொரு ளானஇணைதுணை யாமத்து இயங்கும் பொழுதுதுணையணை யாயதோர் தூய்நெறி யாமே.
217. போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டுமாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.
218. நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்றுமைநின்று எரியும் வகையறி வார்க்கட்குமைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்செய்நின்ற செல்வம் தீயது வாமே.
219. பாழி அகலும் எரியும் திரிபோலிட்டுஊழி அகலும் உறுவினை நோய்பலவாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.
220. பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்தவருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணிஅருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.
221. ஒண்சுட ரானை உலப்பிலி நாதனைஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்றகண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.
222. ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறைஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்கோமத்துள் அங்கி குரைகடல் தானே.
223. அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்துதங்கி இருக்கும் வகையருள்செய்தவர்எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதிபொங்கி நிறுத்தும் புகழது வாமே.

12. அந்தண ரொழுக்கம்
224. அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.
225. வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்போதாந்த மான பிரணவத் துள்புக்குநாதந்த வேதாந்த போதாந்த நாதனைஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்க்களே.
226. காயத் திரியே கருதுசா வித்திரிஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னிநேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.
227. பெருநெறி யான பிரணவம் ஓர்ந்துகுருநெறி யாலுரை கூடிநால் வேதத்திருநெறி யான கிரியை யிருந்துசொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே.
228. சத்திய மும்தவம் தானவன் ஆதலும்எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்றுபெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.
229. வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே.
230. நூலும் சிகையும் நுவலிற் பிரமமோநூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.
231. சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றிஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.
232. திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்குருநெறி யாலே குருபதம் சேர்ந்துகரும நியமாதி கைவிட்டுக் காணும்துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.
233. மறையோர் அவரே மறையவர் ஆனால்மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மைகுறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்றுஅறிவோர் மறைதெரிந்து அந்தண ராமே.
234. அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவிநந்துதல் இல்லை நரபதி நன்றாகும்அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.
235. வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்நாதாந்த போதம் நணுகிய போக்கதுபோதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே.
236. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்துநன்றும் இருந்தும் நலம்பல பேசினும்வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்சென்று வணங்குந் திருவுடை யோரே.
237. தானே விடும்பற்று இரண்டும் தரித்திடநானே விடப்படும் ஏதொன்றை நாடாதுபூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே.

13. அரசாட்சி முறை .(இராச தோடம்)
238. கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான்நல்லாரைக் காலன் நணுகநில் லானே.
239. நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறிநாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே.
240. வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமேவேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்வேட நெறிசெய்தால் வீடது வாமே.
241. மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்துஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே.
242. ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணிஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மைஞானிக ளாலே நரபதி சோதித்துஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
243. ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்மேவும் மறுமைக்கு மீளா நரகமே.
244. திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே.
245. வேந்தன் உலகை மிகநன்று காப்பதுவாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்போந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப்பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.
246. கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரைமேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.
247. தத்தம்சமயத் தகுதிநில் லாதாரைஅத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறிஎத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கேமெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.

14. வானச் சிறப்பு
248. அமுதூறு மாமழை நீரத னாலேஅமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்கமுகூறு தெங்கு கரும்பொடு வாழைஅமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.
249. வரையிடை நின்றிழி வான்நீர் அருவிஉரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்கரையில்லை எந்தை கழுமணி யாறே.

15. தானச் சிறப்பு
250. ஆர்க்கும் இடுமின் அவர்இவர் என்னன்மின்பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

16. அறஞ்செய்வான் திறம்
251. தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்தாமறி வார்க்குத் தமர்பர னாமே.
252. யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலையாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறையாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடியாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.
253. அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்கற்றன போதம் கமழ்பவர் மானிடர்உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்பற்றிவந் துண்ணும் பயனறி யாரே.
254. அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்துவிழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.
255. தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்குஇன்மை அறியாது இளையர்என்று ஓராதுவன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.
256. துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லைஇறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லைமறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்அறந்தான் அறியும் அளவறி வாரே.
257. தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழிமான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்நான்தெய்வம் என்று நமன்வரு வானே.
258. திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணிஇளைப்பினை நீக்கும் இருவழி உண்டுகிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன்விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே.
259. பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசைஅற்றம் உரையான் அறநெறிக் கல்லதுஉற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணைமற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

17. அறஞ்செயான் திறம்
260. எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தனஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்வட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும்பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
261. ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயினகழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்பிழிந்தன போலத்தம் பேரிடர்  ஆக்கைஅழிந்தன கண்டும் அறம்அறி யாரே.
262.அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டுமறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.
263. இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்உருமிடி நாகம் உரோணி கழலைதருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே.
264. பரவப் படுவான் பரமனை ஏத்தார்இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.
265. வழிநடப் பாரின்றி வானோர் உலகம்கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டுவழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.
266. கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றிமெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.
267. இன்பம் இடரென்று இரண்டுற வைத்ததுமுன்பவர் செய்கையி னாலே முடிந்ததுஇன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்அன்பிலார் சிந்தை அறமறி யாரே.
268. கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்படுவது செய்யின் பசுவது வாமே.
269. செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.

18. அன்புடைமை
270. அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
271. பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறைதுன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.
272. என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும்அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றிஎன்போல் மணியினை எய்தஒண் ணாதே.
273. ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னைஈரம் உடையவர் காண்பார் இணையடிபாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்கோர நெறிகொடு கொங்குபுக் காரே.
274. என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே.
275. தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.
276. முன்படைத்து இன்பம் படைத்த முதலிடைஅன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.
277. கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதிஇருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.
278. நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்றுநச்சியே அண்ணலை நாடுகி லாரே.
279. அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

19. அன்பு செய்வாரை அறியும் சிவன்
280. இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்குமகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.
281. இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்தமுன்பிப் பிறவி முடிவது தானே.
282. அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளிஇன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தனதுன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்றுநண்புறு சிந்தையை நாடுமின் நீரே.
283. புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போலஉணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்குஉணர்ச்சியில் லாது குலாவி உலாவிஅணைத்தலும் இன்பம் அதுவிது வாமே.
284. உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லைபத்திமை யாலே பணிந்தடி யார்தொழமுத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
285. கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடிகண்டேன் கரியுரி யான்தன் கழலிணைகண்டேன் கமல மலர்உறை வானடிகண்டேன் கழலதென் அன்பினுள் யானே.
286. நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்றுஉம்பரில் வானவர் ஓதுந் தலைவனைஇன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்அன்பனை யாரும் அறியகி லாரே.
287. முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்திஅன்பில் அவனை அறியகி லாரே.
288. ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.
289. விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையைஎட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனைமட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.

20. கல்வி
290. குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானைமறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.
291. கற்றறி வாளர் கருதிய காலத்துக்கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டுகற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே.
292. நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்மற்றொன்று இலாத மணிவிளக் காமே.
293. கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனைவல்லியுள் வாதித்த காயமும் ஆமே.
294. துணையது வாய்வரும் தூயநற் சோதிதுணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்துணையது வாய்வரும் தூயநற் கந்தம்துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.
295. நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே.
296. ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்குவாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.
297. வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தைஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.
298. பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்கிற்ற விரகிற் கிளரொளி வானவர்கற்றவர் பேரின்பம்  உற்றுநின் றாரே.
299. கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்துஉடலுடை யான்பல ஊழிதொ றூழிஅடல்விடை யேறும் அமரர்கள் நாதன்இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.

21. கேள்வி கேட்டமைதல்
300. அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.
301. தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியையாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.
302. மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்அயன்பணி கேட்பது அரன்பணி யாலேசிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்பயன்பணி கேட்பது பற்றது வாமே.
303. பெருமான் இவனென்று பேசி இருக்கும்திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர்வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.
304. ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்திநேசமு மாகும் நிகழொளி யாய்நின்றுவாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.
305. விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்துஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போதுவழுக்கி விடாவிடில் வானவர் கோனும்இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.
306. சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மைஅறியாது இருந்தார் அவராவார் அன்றே.
307. உறுதுணை யாவது உயிரும் உடம்பும்உறுதுணை யாவது உலகுறு கேள்விசெறிதுணை யாவது சிவனடிச் சிந்தைபெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே.
308. புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்மகிழநின் றாதியை ஓதி உணராக்கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.
309. வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசிஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாதுஅச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியைநச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே.

22. கல்லாமை
310. கல்லா தவரும் கருத்தறி காட்சியைவல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்கல்லாதார் இன்பம் காணுகி லாரே.
311. வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறைகல்லா தவர்கள் கலப்பறி யாரே.
312. நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்துநில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.
313. கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.
314. நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணிவல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்கல்லா மனித்தர் கயவர் உலகினில்பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.
315. விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனிகண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்ததுமண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.
316. கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாததுகணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சிகணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.
317. கல்லாத மூடரைக் காணவும் ஆகாதுகல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்றுகல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்கல்லாத மூடர் கருத்தறி யாரே.
318. கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்மற்றும் பலதிசை காணார் மதியிலோர்கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.
319. ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்றசோதி நடத்தும் தொடர்வறி யாரே.

23. நடுவு நிலைமை
320. நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லைநடுவுநின் றார்க்கு நரகமும் இல்லைநடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.
321. நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதிநடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர்நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.
322. நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.
323. தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றிஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடிமூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தைநான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

24. கள்ளுண்ணாமை
324. கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேராகழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும்முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே.
325. சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடாநித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே.
326. காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்மாமல மும்சம யத்துள் மயலுறும்போமதி யாகும் புனிதன் இணையடிஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.
327. வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.
328. உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.
329. மயக்கும் சமய மலமன்னு மூடர்மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்மயக்குறு மாமாயை மாயையின் வீடுமயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
330. மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்இயங்கும் மடவார்தம் இன்பமே எய்திமுயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.
331. இராப்பகல் அற்ற இடத்தே இருந்துபராக்கற ஆனந்தத் தேறல் பருகார்இராப்பகல் அற்ற இணையடி இன்பத்துஇராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.
332. சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.
333. சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச்சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.
334. தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியேமெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.
335. யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்போத அமுதைப் பொசித்தவர் எண்சித்திமோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்றுஆகும் மதத்தால் அறிவழிந் தாரே.
336. உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்துஎண்ணீர் குரவன் இணையடித் தாமரைநண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே.
முதல் தந்திரம் முற்றிற்று

 

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top