
Mayil Virutham Lyrics in Tamil
அருணகிரிநாதரின் மயில் விருத்தம்
காப்பு – சந்தன பாளித
சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப்பரவுங்கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரதகரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச்சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனேசித்ரக் கலாபமயிலே ரத்ன கலாபமயிலே!
1. சந்தான புஷ்பபரி
சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்சரணயுகள அமிர்தப்ரபாசந்த்ர சேகர மூஷிகாரூட வெகுமோகசத்யப்ரிய ஆலிங்கனச்சிந்தா மணிக் கலச கரகட கபோலத்ரியம்பக விநாயகன்முதற்சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வருசித்ரக் கலாப மயிலாம்மந்தாகிநிப் பிரப வதரங்க விதரங்கவனசரோ தயகிர்த்திகாவரபுத்ர ராஜீவ பரியங்க தந்தியவர அசலன் குலிசாயுதத்துஇந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரணஇகல்வேல் விநோதன் அருள்கூர்இமையகிரி குமரிமகன் ஏறு நீலக்ரீவரத்னக் கலாப மயிலே!
2. சக்ரப் ரசண்டகிரி
சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளிபட்டுக் கிரவுஞ்ச சயிலந்தகரப் பெருங்கனக சிகர அச்சிலம்பும்எழுதனிவெற்பும் அம்புவியும்எண் திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரும்சித்ரப் பதம்பெயரவேசேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்திடுக்கிட நடிக்கும் மயிலாம்பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரிபத்மப் பதங் கமழ்தரும்பாகீரதிச் சடில யோகீ சுரர்க்குரியபரம உபதேசம் அறிவிக்கைக்குச்செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒருகந்தச்சுவாமி தணிகைக்கல்லார கிரியுருக வருகிரண மரகதகலாபத்தில் இலகு மயிலே!
3. ஆதார பாதளம்
ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூதண்ட முகடது பெயரவேஆடரவ முடி பெயர எண்டிசைகள் பெயரஎறிகவுட்கிரி சரம்பெயரவேவேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார்மிக்க ப்ரியப் படவிடாவிழிபவுரி கவுரி கண்டுள மகிழ விளையாடும்விஸ்தார நிர்த்த மயிலாம்மாதாநு பங்கியெனு மாலது சகோதரிமகீதரி கிராத குலிமாமறை முநிகுமாரி சாரங்கன் தனிவந்தவள்ளிமணி நூபுர மலர்ப்பாதார விந்த சேகரனேய மலரும்உற்பலகிரி அமர்ந்த பெருமாள்படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்பசுந்தோகை வாகை மயிலே!
4. யுககோடி முடிவின்
யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்உதித்ததென் அயன் அஞ்சவேஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாளலோகமும் பொற் குவடுறும்வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திருவிசும்பிற் பறக்க விரிநீர்வேலை சுவறச்சுரர் நடுக்கங் கொளச்சிறகைவீசிப் பறக்கு மயிலாம்நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்த நரகேசரி முராரி திருமால்நாரணன் கேசவன் சீதரன் தேவகீநந்தனன் முகுந்தன் மருகன்முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்முகிலுலவு நீலகிரிவாழ்முருகன் உமை குமரன் அறு முகன்நடவு விகடதடமூரிக் கலாப மயிலே!
5. சோதியிம வேதண்ட
சோதியி மவேதண்ட கன்னிகையர் தந்த அபிநயதுல்ய சோம வதனதுங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாமசுந்தரி பயந்த நிரைசேர்ஆதிநெடு மூதண்ட அண்ட பகிர் அண்டங்கள்யாவுங் கொடுஞ் சிறகினால்அணை உந்தனது பேடை அண்டங்கள் என்னவேஅணைக்குங் கலாப மயிலாம்நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடிநித்தரும் பரவு கிரியாம்நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்நிர்வியா குலன் சங்குவாள்மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்மாதவன் முராரி திருமால்மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்வரமுதவு வாகை மயிலே!
6. சங்கார காலமென
சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்சகல லோகமும் நடுங்கச்சந்த்ர சூரியர் ஒளித்தி இந்த்ராதி அமரருஞ்சஞ்சலப் பட உமையுடன்கங்காளர் தனி நாடகஞ் செய்த போதந்தகாரம் பிறந்திட நெடுங்ககனகூடமும் மேலை முகடுமூ டியபசுங்கற்றைக் கலாப மயிலாஞ்சிங்கார குங்கும படீரம்ருக மதயுகளசித்ரப் பயோதர கிரித்தெய்வ வாரண வநிதை புனிதன் குமாரன்திருத்தணி மகீரதன் இருங்கெங்காதரன் கீதம் ஆகிய சுராலயக்ருபாகரன் கார்த்திகேயன்கீர்த்தி மாஅசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரிகிழிபட நடாவு மயிலே!
7. தீரப் பயோததி
தீரப் பயோததி(க) திக்குமா காயமுஞ்செகதலமு நின்று சுழலத்திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்தீக் கொப்புளிக்க வெருளும்பாரப் பணாமுடி அநந்தன் முதல் அரவெலாம்பதை பதைத்தே நடுங்கப்படர் சக்ர வாளகிரி துகள்பட வையாளிவருபச்சை ப்ரவாள மயிலாம்ஆர ப்ரதாப புளகித மதன பாடீரஅமிர்த கலசக் கொங்கையாள்ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபரமாநந்த வல்லி சிறுவன்கோரத்ரி சூல த்ரியம்பக ஜடாதாரகுருதரு திருத்தணிகை வேள்கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர்பதிகுடிபுகுத நடவு மயிலே!
8. செக்கரள கேசசிக
செக்கரள கேச சிகரத்நபுரி ராசிநிரைசிந்தப் புராரி யமிர்தந்திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்தீவிஷங் கொப்புளிப்பச்சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகலசங்கார கோர நயனத்தறுகண் வாசுகிபணா முடியெடுத்து தறுமொருசண்டப்பர சண்டமயிலாம்விக்ரம கிராதகுலி புன மீதுலாவியவிருத்தன் திருத்தணிகைவாழ்வேலாயுதன் பழ வினைத் துயர் அறுத்தெனைவெளிப்பட வுணர்த்தி யருளித்துக்க சுக பேதமற வாழ்வித்த கந்தச்சுவாமி வாகனமானதோர்துரககஜ ரதகடக விகடதட நிருதர்குலதுஷ்டர் நிஷ்டூ ரமயிலே!
9. சிகரதம னியமேரு
சிகரதமனிய மேரு கிரிரசத கிரிநீலகிரியெனவும் ஆயிரமுகத்தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்திங்கள் சங்கெனவும் ப்ரபாநிகரெனவும் எழுதரிய நேமியென உலகடையநின்ற மாமுகில் என்னவேநெடியமுது ககனமுகடுற வீசி நிமிருமொருநீலக் கலாப மயிலாம்அகரு மரு மணம்வீசு தணிகை அபிராமவேள்அடியவர்கள் மிடிய கலவேஅடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்அலங்கற் குழாம் அசையவேமகரகன கோமளக் குண்டலம் பலஅசையவல்லவுணர் மனம்அசைய மால்வரை அசைய உரகபிலம் அசைய எண்டிசை அசையவையாளி யேறு மயிலே!
10. நிராசத விராசத
நிராசத விராசத வரோதய பராபரனிராகுல னிராமய பிரானிலா எழுதலாலற மிலா னெறியிலானெறிநிலாவிய உலாச இதயன்குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்குராநிழல் பராவு தணிகைக்குலாசல சராசரம் எலாமினி துலாவியகுலாவிய கலாப மயிலாம்புராரி குமரா குருபரா எனும் வரோதயபுராதன முராரி மருகன்புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுகலாகும் அயிலாயுதன் னெடுந்தராதல கிராதர்கள் குலாதவ பிராமவலசாதனன் விநோத சமரன்தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்ஷடாநநன் நடாவு மயிலே!
11. எந்நாளும் ஒருசுனையில்
எந்நாளும் ஒருசுனையில் இந்த்ர நீ லப்போதிலங்கிய திருத் தணிகை வாழ்எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒருநம்பிரானான மயிலைப்பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்பகர்ந்த அதிமதுர சித்ரப்பாடல் தருமாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்படிப்பவர்கள் ஆதி மறைநூல்மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்வாணி தழுவப் பெறுவரால்மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்வாரிச மடந்தை யுடன்வாழ்அந்நாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்அமுதாசனம் பெறுவர்மேல் ஆயிரம் பிறை தொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்அழியா வரம் பெறுவரே!
Benefits of Mayil Virutham in Tamil
மயில் விருத்தம் பலன்கள்
மயில் விருத்தம் இந்துக் கடவுளான முருகனின் பக்தர்கள் பின்பற்றும் ஆன்மீக நடைமுறையாகும். இது மயில் இறகுகளைப் பயன்படுத்தி பிரார்த்தனை மற்றும் பிரசாதம் வழங்குவதை உள்ளடக்கியது. தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்களைப் பொறுத்து குறிப்பிட்ட பலன்கள் மாறுபடலாம் என்றாலும், மயில் விருத்தத்துடன் தொடர்புடைய சில சாத்தியமான பலன்கள் இங்கே:
பக்தி இணைப்பு
சின்னம் [மயில் இறகு]
உள் மாற்றம்
எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்கும்
ஆசீர்வாதம் மற்றும் பூர்த்தி
குணப்படுத்துதல் மற்றும் நல்வாழ்வு
கலாச்சார மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம்
மயில் விருத்தத்தின் பலன்கள் அகநிலை மற்றும் நபருக்கு நபர் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையான முக்கியத்துவம் தனிநபரின் நம்பிக்கை, பக்தி மற்றும் தனிப்பட்ட ஆன்மீக பயணத்தில் உள்ளது.
Also, read

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam