விரய செலவை குறைக்கும் வாராகி மந்திரம்

விரய செலவை குறைக்கும் வாராகி மந்திரம்

Qries


நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்க கூடிய ஒவ்வொரு கஷ்டத்தையும் தீர்க்கக்கூடிய ஒரு வழி என்பது கண்டிப்பாக இருக்கும். அந்த வழியை நாம் சரியாக கண்டுபிடித்து விட்டோம் என்றால் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அந்த கஷ்டத்தில் இருந்து விரைவிலேயே வெளிவர முடியும். அப்படி நம்மால் சமாளிக்க முடியாமல் கஷ்டப்படக்கூடிய ஒரு விஷயத்திற்கு சிறப்பான ஒரு நல்ல வழி கிடைக்க வேண்டும் என்றால் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும். அதிலும் குறிப்பாக உக்ர தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது நம்முடைய பிரச்சனை தீர்வதற்குரிய வழியை அந்த தெய்வமே காட்டுவார்கள்.அந்த வகையில் முதலிடத்தை பிடிக்கக்கூடிய உக்ர தெய்வமாக திகழ்பவள்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனிடம் எந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நாம் வழிபாடு செய்கிறோமோ அந்த பிரச்சனை தீர்வதற்குரிய வழியை அவள் காட்டுவாள். அதிலும் வாராஹி அம்மனின் மந்திர வழிபாடு அதீத பலனை தரக் கூடியதாக திகழ்கிறது. அந்த வகையில் வீண் செலவுகளும், விரய செலவுகளும் குறைவதற்கு கூற வேண்டிய வாராகி அம்மனின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். – Advertisement -இந்த மந்திர வழிபாட்டை பஞ்சமி திதி வரக்கூடிய நாளில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இந்த மந்திர வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் வாராகி அம்மனின் படம் அல்லது சிலை இருக்கும் பட்சத்தில் அதை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து செவ்வரளி மலர்களை சூட்டி வாராகி அம்மனுக்கு ஒன்று அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் நெய் தீபத்தை ஏற்ற வேண்டும்.இந்த தீபம் வடக்கு பார்த்த மாதிரி இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் வீட்டில் வாராகி அம்மனின் படமோ சிலையோ இல்லை என்னும் பட்சத்தில் தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு வராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக காய்ச்சிய பசும்பால் அல்லது ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு விரிப்பை விரித்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு பின்வரும் வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை 308 முறை கூறவேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 11 நாட்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மந்திரத்தை கூறி வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு ஏற்படக்கூடிய வீண் விரயங்கள், வீண் செலவுகள், விரய செலவுகள் என்று அனைத்தும் நீங்கி சேமிப்பு உயரும். – Advertisement – மந்திரம்“ஓம் க்லீம் வாராஹி”இதையும் படிக்கலாமே: தீமைகள் நீங்க மோதக கணபதி வழிபாடுஅபரிவிதமான சக்தியை கொண்ட துடிப்பான தெய்வங்களுள் ஒரு தெய்வமாக திகழக்கூடிய வாராஹி அம்மனை இப்படி நாம் 11 நாட்கள் தொடர்ச்சியாக மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வாராகி அம்மனின் அருளால் விரைய செலவுகள் முற்றிலும் நீங்கும் சேமிப்பு உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top