இன்றைய ராசிபலன் – 30 மே 2024

இன்றைய ராசிபலன் – 30 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற எதிரிகள் தானாக உங்களை விட்டு விலகி விடுவார்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக இருப்பீர்கள். எந்த அளவுக்கு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை சுமூகமாக சரி செய்து விடுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளும் கிடைக்கும். நிறைய பேருக்கு நல்லது செய்யக்கூடிய வகையில் சிந்தித்து செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாளாக இருக்கும். அதாவது எதிரிகள் முன்பு வெற்றி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன விஷயத்தை கூட நுணுக்கமாக யோசித்து சிந்தித்து செயல்படுத்துவீர்கள். அதனால் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்பு இருக்கும். வேலையில் கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். உடல் அசதி இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் குழந்தைகளோடு கருத்து வேறுபாடு இருக்கும். குழந்தைகளோடு அதிகமாக வாக்குவாதம் செய்யாதீர்கள். பெற்றவர்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். இன்று மாலை கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். நிறைய நல்ல விஷயங்களை தொடங்க இன்றைய நாள் சாதகமாக அமையும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட தூர பயணத்தை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். எதிரிகளோடு நேரடியாக சண்டை போட வேண்டாம். வாக்குவாதம் செய்யவும் கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கடைசி நிமிடத்தில் சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். பெரிய பிரச்சனை வரக்கூடிய சூழ்நிலை நிலவும். ஆனால் அந்த பிரச்சனையின் மூலம் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. நிறைய அனுபவ பாடம் கிடைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க கூடாது.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் கோர்ட்டு கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வந்து போகும். பெரிய பாதிப்புகள் இருக்காது. வீட்டில் இருக்கும் முதியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்தவும் ‌
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அசதி நிறைந்த நாளாக இருக்கும். வேலை பளு இரட்டிப்பாக இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் வேலையையும் சேர்த்து உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். இன்று மாலை வீட்டிற்கு நேரத்திற்கு செல்வது சந்தேகம்தான். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் தொல்லை இருக்காது. உங்களுடைய நல்ல மனதை எல்லோரும் புரிந்து கொண்டு நடப்பார்கள். இரவு நல்ல தூக்கம் வரும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைப்பதற்கு உண்டான வழி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு நட்பு ஒன்று சேரும். சுப செலவு உண்டாகும். கட்டுமான தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். எல்லா இடத்திலும் தேவையில்லாமல் நீங்களே சண்டைக்கு போவீர்கள். இதனால் உங்களுக்கு சின்ன சின்ன கெட்ட பெயர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கடன் வாங்கவோ கொடுக்கவும் கூடாது ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பிக்கல் படங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் தொந்தரவு இருக்கும். டார்கெட் பிரஷர் மூலம் சில பேர் ரொம்பவும் மனவழுத்தத்திற்கு ஆளாகலாம். ரொம்ப கவலை படாதீங்க. மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்கள். குடும்பத்தோடு மிச்சம் இருக்கும் நேரத்தை செலவு செய்யுங்கள். பிரச்சினைகளுக்கு தானாக முடிவு கிடைக்கும்.

– Advertisement –

Qries
Scroll to Top