
– Advertisement –
இந்த சீசனில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக திகழ்வதுதான் பலாக்காய். பலாக்காயில் அதிக அளவு விட்டமின்களும், புரோட்டீன்களும் இருக்கின்றது. மேலும் இதில் பலவிதமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பலாக்காயை வைத்து பலவிதமாக நாம் சமைக்கலாம். பலாக்காய் வைத்து கூட்டு, பொரியல் என்று செய்வதைப் போலவே பலாக்காயை வைத்து ஒருமுறை பிரியாணியும் செய்யலாம். இந்த பிரியாணியை மட்டும் நாம் செய்தோம் என்றால் யாருமே இதை சைவம் என்று கூறவே மாட்டார்கள். மட்டன் பிரியாணியா? சிக்கன் பிரியாணியா? என்று கேட்கும் அளவிற்கு மிகவும் சுவையாக இருக்கும். அப்படி சுவை மிகுந்த பலாக்காய் பிரியாணியை எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
பலாக்காய் நறுக்கியது – ஒரு கப்பாஸ்மதி அரிசி – ஒரு கப்எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் – 3இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்கிராம்பு – 2ஏலக்காய் – 2பட்டை – ஒரு துண்டுபிரியாணி இலை – 1வெங்காயம் – ஒன்றுதக்காளி – ஒன்றுகரம் மசாலா – 2 டேபிள் ஸ்பூன்பிரியாணி மசாலா – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுதயிர் – 3 டேபிள்ஸ்பூன்எலுமிச்சை – அரைப்பழம்புதினா – ஒரு கைப்பிடி அளவுமஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
– Advertisement –
செய்முறை
முதலில் பலாக்காயை நறுக்க வேண்டும். அதற்கு முன்பாக கைகளிலும் கத்தியிலும் எண்ணெயை தடவிக்கொண்டு நறுக்க வேண்டும். அப்பொழுதுதான் அதில் இருக்கக் கூடிய பாலால் நமக்கு எந்தவித அரிப்பும் ஏற்படாது. பலாக்காயை நறுக்கி அதன் தோலை நீக்கிவிட்டு கறி அளவிற்கு நறுக்கி மஞ்சள் தூள் போட்ட தண்ணீரில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து குக்கர் சூடானதும் அதில் எண்ணெய், நெய் இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் நன்றாக காய்ந்ததும் இதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை போன்றவற்றை சேர்க்க வேண்டும். பிறகு நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாடை நீங்கும் பொழுது நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –
வெங்காயம் பொன்னிறம் ஆன பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதில் சேர்த்து தக்காளி நன்றாக குலையும் வரை வேக விட வேண்டும். பிறகு இதில் கரம் மசாலா, பிரியாணி மசாலா இவற்றை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த மசாலாவின் வாடை போன பிறகு நறுக்கி வைத்திருக்கும் பலாக்காயை சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும். பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியையும் இதனுடன் போட்டு ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசிக்கு இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பிறகு பிரியாணிக்கு தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும். இதனுடன் தயிர் மற்றும் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு புதினா இலைகள் ஒரு கைப்பிடி அளவு சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வந்ததும் அடுப்பிலிருந்து குக்கரை இறக்கி விடலாம். குக்கர் விசில் முற்றிலும் போன பிறகு குக்கர் மூடியை திறந்து ஒரு முறை கலந்து விட்டால் சுவையான பலாக்காய் பிரியாணி தயாராகி இருக்கும்.
இதையும் படிக்கலாமே:சைவ இறால் தொக்கு செய்முறை
முக்கனிகளில் ஒன்றாக திகழக்கூடிய பலாப்பழத்தை உண்பதற்கு முன்பாகவே பலாக்காயை வைத்து இப்படி ஒரு முறை பிரியாணி செய்து பாருங்கள். பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் பலாக்காயை வைத்து இப்படி பிரியாணி செய்தால் அதற்கு அடிமையாகி விடுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam